- Wednesday
- May 13th, 2026
“வெப்பம் அதிகமாக உள்ளதால் குளுமைக்காக ஆசிரியர் மது அருந்தினார். ஆனால் அவர் முடாக் குடிகாரர் இல்லை” இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட ஆசிரியர் சார்பில் மூத்த சட்டத்தரணி ஒருவர் மன்றிடம் உரைத்தார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் வீதிப் போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால், ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மதுபோதையில் வாகனம் செலுத்திய...
கொக்குவில் முதலி கோவில் பகுதியில் வைத்து நேற்று மாலை 4 மணியளவில் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். “ஆவாக் குழுவைச் சேர்ந்த மோகன் அசோக் என்பவரே இந்த தாக்குதலை மேற்கொண்டார். அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன” என்றும் பொலிஸார் தெரிவித்தனர். வாள்வெட்டில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் ஸ்ரீதர் திரையரங்கின் உரித்தை மீளப் பெற்றுத் தருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்களாக இராட்ணசபாபதி ஸ்ரீதர் உள்ளிட்ட 6 பேர் மனுதாரர்களாகவும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை எதிர்மனு தாரராகவும் குறிப்பிட்டு சட்டத்தரணி கேசவன் சயந்தன்...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் உள்ள சிக்கல்களாக, ஜனாதிபதி கூறும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஆயுள் தண்டனை பெற்றுள்ள தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த போதே சுமந்திரன்...
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 27 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தண்டிக்கப்பட்டனர். இது தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 37 பேருக்கு எதிராக கோப்பாய் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற...
வவுனியா நுண்நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற பெண்ணொருவர் அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவரின் முறைகேடான செயற்பாட்டின் காரணமாக நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வவுனியா, மறவன்குளம் கிராமத்தில் வசிக்கும் சக்திவேல் சசிகலா (வயது 22) என்ற ஒரு பிள்ளையின் தாயார் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...
உலக தொழிலாளர் தினத்தினை மே 01 திகதி கொண்டாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும், அந்த தீர்மானத்தினால் பௌத்த புனித நாளுக்கு எந்த தீங்கும் எற்பாடாது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் துரைரட்ணசிங்கம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரனின் வீட்டில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்....
தமிழ் மக்களின் வாழ்விடங்களில் பௌத்த விகாரைகள் கட்டப்படுவதை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கும் அதேவேளை பௌத்தர்கள் வாழாத பிரதேங்களில் விகாரைகள் எதற்கு அமைக்கப்பட வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்.அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று...
சமுர்த்தி அமைச்சினால் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேச செயலகங்களில் பெரும்பான்மையின இளைஞர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டிருக்கும் செயலானது தமிழ் மக்களை மலினப்படுத்தும் செயலாகும் என அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார். இந்த நியமனம் குறித்து நேற்றயதினம் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,...
முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் மழையுடன் கூடியகடும் காற்று வீசியதன் காரணமாக மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட இந்த மினி சூறாவளியால் மாங்குளம், துணுக்காய் வீதியில் அமைந்துள்ள சுமார் 10 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சில வீடுகள் சிறிதளவு...
யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அதன் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. இதன்போது தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு தந்தை செல்வா அறக்காவலர் சபையின் தலைவர், தந்தை செல்வாவின் புதல்வர், யாழ். மாநகர முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர்...
வடக்கு மாகாண சபையின் 121ஆவது அமர்வு, பிரதி அவைத்தலைவர் வல்லிபுரம் கமலேஷ்வரன் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. வடக்கு மாகாண அவைத்தலைவரின் மனைவி காலமாகியதால், பிரதி அவைத்தலைவரின் தலைமையில் சபை கூடியது. எனினும், இன்றைய தினம் முக்கிய விடயங்கள் குறித்து பேசப்படவில்லை. இந்நிலையில், ஆளுநரின் அறிவிப்புகள், சபை அறிவிப்புகள், அறிக்கைகள் என்பன மாத்திரம் இடம்பெற்று சபை...
வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டிப் பகுதியில் 10 கிலோ கிராம் வெடி மருந்துடன் ஒருவர் நேற்றயதினம் காலை கைது செய்யப்பட்டார் என்று காங்கேசன்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். “சந்தேகநபர், யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்தவர். அவர் வெடிமருந்தை எதற்காகக் கொண்டு சென்றார் என்ற தகவல் வெளியாகவில்லை. விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த வெடிபொருள்களிலிருந்து அவற்றை சந்தேகநபர் பெற்றுக்கொண்டாரா? என்ற...
இலங்கையில் யுத்த காலத்தில் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்ட தமிழர்களை வயரால் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும், சாகும் வரை அடித்தும் கொன்றதாகவும் இலங்கையின் விசாரணை அதிகாரி ஒருவர் ஜாஸ்மின் சூக்காவை நிறைவேற்று பணிப்பாளராக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்குமான செயற்திட்டத்திடம் [ITJP] சாட்சியம் வழங்கியுள்ளார். இது தொடர்பான அதிர்ச்சி நிறைந்த அறிக்கை ஒன்றை...
சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை நேற்று (புதன்கிழமை) முன்னெடுத்தனர். தென்மராட்சி பிரதேச பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியுமே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை வெளிக்களப்பணியில் ஈடுபட்டிருந்த சாவகச்சேரி பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், நாவற்குழியில் வைத்து அங்கிருந்த...
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு பணித்துள்ளது. இதனால் அதன்பணிகள் நேற்று (புதன்கிழமை) இடை நிறுத்தப்பட்டது. வன்னி இறுதிப் போரின் போது உயிரிழந்த...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து நடாத்தும் தொழிலாளர் தின எழுச்சி நிகழ்வு எதிர்வரும் 1.05.2018 அன்று நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வில் அனைத்து தொழிற் சங்கங்கள், பொது அமைப்புக்கள் பொது மக்கள் அனைவரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம். இடம் :- கிட்டு பூங்கா...
வடக்கு மாகாண அமைச்சரவை மீது முன்வைக்கப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மை நிலை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார். வடக்கு மாகாண அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மீது மோசடிக் குற்றச்சாட்டை உள்ளூர் பத்திரிகை ஒன்று அண்மையில் வெளியிட்டது. அத்துடன் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்...
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவில் பணியாற்றும் இரகசியப் பொலிஸ் உத்தியோகத்தர் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றயதினம் இரவு இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் மைதானத்துக்கு வெளியே இடம்பெற்ற இரு தரப்பினருக்கு இடையேயான மோதலின் போதே இரகசிய பொலிஸ் உத்தியோக்கத்தரான யாபா காயமடைந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை மத்திய வங்கியால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று பெறுமதிகளின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155.26 ரூபாவாகவும் அதன் விற்பனைப் பெறுமதி 159.04 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இலங்கை ரூபாவின் இந்த பெறுமதி வீழ்ச்சி வரலாற்றில் முதல் தடவையாக பதிவாகியுள்ளதுடன்,...
Loading posts...
All posts loaded
No more posts
