Ad Widget

போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் அரச உத்தியோகஸ்தர்கள் உட்பட 27 பேர் கைது!!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 27 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தண்டிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 37 பேருக்கு எதிராக கோப்பாய் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 7 பேர், டெங்கு நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவாக குடியிருப்பு சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 பேர் என 10 பேர் தண்டிக்கப்பட்டனர்.

மதுபோதையில் சாரத்தியம் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் 27 பேர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன், அவர்களில் 3 பேர் அரச உத்தியோகத்தர்கள் என பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

இதன்போது, அரச உத்தியோகஸ்தர்கள் மூவருக்கும் 7 ஆயிரத்து 500 ரூபா தண்டமும் ஆயிரத்து 500 ரூபா அரச செலவும் விதித்து மன்று உத்தரவிட்டதுடன், அவர்களின் சாரதி அனுமதிப் பத்திரங்களும் 9 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்க மன்று கட்டளையிட்டது.

மேலும் அதே குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட ஏனைய 24 பேருக்கும், 7 ஆயிரத்து 500 ரூபா தண்டம் செலுத்த வேண்டும், அத்துடன் 50 மணித்தியாலங்களுக்கு குறையாத சமூகப் பணியில் ஈடுபடவேண்டும் என்றும் மன்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts