Ad Widget

நுண்நிதி நிறுவன ஊழியரின் முறைகேடான செயற்பாட்டினால் பெண் தற்கொலை!!!

வவுனியா நுண்நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற பெண்ணொருவர் அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவரின் முறைகேடான செயற்பாட்டின் காரணமாக நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வவுனியா, மறவன்குளம் கிராமத்தில் வசிக்கும் சக்திவேல் சசிகலா (வயது 22) என்ற ஒரு பிள்ளையின் தாயார் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த 23 ஆம் திகதி சசிகலா தனது வீட்டினில் நஞ்சருந்திய நிலையில் அவரது சகோதரனால் மீட்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தநிலையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் கணவனை பிரிந்த நிலையில் தனது தந்தையாரின் வீட்டில் 3 வயதுடைய தனது ஆண் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் நுண்நிதி நிறுவனத்திடம் இருந்து கடன்களை பெற்றுள்ளதாகவும் அதனை திருப்பி செலுத்தாத முடியாத நிலையில் இருந்தபோது, கடனை வசூலிக்க வந்த நிறுவனத்தின் முகவர் சசிகலாவை கடுமையான வார்த்தைகளால் திட்டியதால் அவர் மனமுடைந்து நஞ்சருந்தியதாகவும் சசிகலாவின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts