ஜனாதிபதி வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளது – இந்திய பிரதமர் அலுவலகம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிட்டக் கருத்து திரிபுப்படுத்தப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இதுதொடர்பில் நேற்றைய தினம்(புதன்கிழமை) தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதுடன், இதன்போது இந்த விடயம்...

பொலிஸ் அதிகாரியின் செயற்பாடு தொடர்பில் நீதவான் அதிருப்தி!

யாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு ஒன்றுக்காக சந்தேகநபர் ஒருவர் நேற்று(செவ்வாய்கிழமை) முன்னிலையாகியிருந்தார். சந்தேகநபர் வழக்கு நடவடிக்கை நிறைவடைந்து...
Ad Widget

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் சிலவற்றை விடுவிக்க அமைச்சரவை அனுமதி

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் சிலவற்றை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய மன்னாரில் 23 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 53 ஏக்கர் காணியும், திருகோணமலையில் 3 ஏக்கர் காணியும் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இதற்கான யோசனையை மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்வைத்த நிலையில், அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. மேலும் இவ்வாறு...

கிளிநொச்சி மருத்துவமனையில் இரண்டாவது மகப்பேற்று நிபுணர் கடமையேற்பு!!

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் நேற்றையதினம் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணரும் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். கிளி­நொச்சி மாவட்ட மருத்­து­வ­ம­னை­யில் கடந்த சில மாதங்­க­ளுக்கு முன் மகப்­பேற்று மருத்­துவ நிபு­ணர் இல்­லாத நிலை­யில் கர்ப்­பி­ணித் தாய்­மார்­கள் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்­டி­ருந்­த­னர். இந்த நிலை­யில் கடந்த மாதம் 17 ஆம் திகதி மத்­திய சுகா­தார அமைச்­சி­னால் மகப்­பேற்று மருத்­துவ...

மாற்றுத் திறனாளியை யாழ் பஸ்நிலையம் சென்று பிச்சை எடுக்குமாறு கூறிய வட்டுக்கோட்டை பெண் கிராமசேவகர்!!

வழங்கப்பட்ட உறுதி மொழிக்கேற்ப அகற்றப்பட்ட தனது தொழிலிடத்தை மீண்டும் அமைத்து தாருங்கள் என கேட்ட மாற்றுத் திறனாளியை யாழ் பஸ்நிலையம் சென்று பிச்சை எடு என்று வட்டுக்கோட்டையின் வடக்கு அராலி பகுதி ஜே/164 பெண் கிராமசேவகர் ஒருவர் அடாவடித்தனமாக நடத்திய சம்பவம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. யாழ் மாவட்டத்தின் அநேக பகுதிகளில் நீர் வழங்கலை மேற்கொள்வதற்காக...

காணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன்!

காணிகள் விடுவிப்பதற்கு தமக்கு பணம் தேவையென படைத் தரப்பினர் கோருகின்ற போது அதற்கான நிதியை மீள்குடியேற்ற அமைச்சிலிருந்து அல்லாமல் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்தே அரசாங்கம் வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காயமடைந்தவர்கள் பிரதேச...

யாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு!

யாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் மடக்கி பிடிக்கப்பட்ட கொள்ளையர்களை அப்பகுதி இளைஞர்கள் நையப் புடைத்திருந்ததுடன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். திருநெல்வேலி பகுதியில் 2 ஆலயங்களிலும் 3 வீடுகளில் கடந்த இரு நாட்களில் 4 பேர்...

தன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி குற்றச்சாட்டு

இந்தியாவின் ‘றோ’ புலனாய்வு அமைப்பு தன்னைப் படுகொலைசெய்வதற்கு சதிசெய்துவருவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியா- இலங்கை இராஜதந்திர உறவில் பெரும் விரிசலை தோற்றுவிக்கக்கூடியதாக இந்தக் குற்றச்சாட்டு அமைந்துள்ளது என இந்தியாவின் ஹிந்துப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன தன்னை...

போலிக்கடவுச் சீட்டுக்களுடன் விமான நிலையத்தில் வட மாகாணத்தினைச் சேர்ந்த தமிழர்கள் கைது!

போலிக்கடவுச் சீட்டின் மூலம் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் வட மாகாணத்தினைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவிற்கு பயணிக்க முயற்சித்த நிலையிலேயே நேற்று(செவ்வாய்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது யாழ்.பருத்தித்துறையைச் சேர்ந்த பொன்னுத்துரை துவாரகன் (வயது...

கனடாவில் இலங்கை தமிழ் பெண் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்!

கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்க்கம் பகுதியில் வசிக்கும் 46 வயதான தமிழினி குகேந்திரன் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கனேடிய பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த 15ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் Brimley Road, Highglen Avenue பகுதியில் உள்ள அவரது வீட்டில்...

அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும். எனக் கோரிக்கை விடுவது நல்லதல்ல – சி.தவராசா

தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் மிக மிக முக்கியமாக அமையும் அதேநேரம் முடிந்தவரையில் மகிந்தவிற்கு தீனிபோடாமலும் நாம் செயல்பட வேண்டியதும் இன்றைய தேவையாகவுள்ளது. என வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள சிறைகளில் வாடும் 107 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்கப்பட வேண்டியது கட்டாயம். அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

மகனைத் தாக்க வந்தவர்கள் தாயை துடிதுடிக்க கொலை செய்த கொடூரம்!!! மூவர் கைது!!

மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் இந்தக் கொடூரச் சம்பவம் இடம்பெற்றது. வீட்டுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று...

யாழில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 40 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நடவடிக்கையில் 40 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களளுள் 151 பேருக்கு எதிராக வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்காக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய யாழ்ப்பாணம், மானிப்பாய், சுன்னாகம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை தொடக்கம் இந்த பொலிஸ் தேடுதல் நடவடிக்கை...

பிரபாகரன் நலமுடன் உள்ளார்! உரிய நேரத்தில் வெளிவருவார்!!- நெடுமாறன்

`இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரபாகரன் தலைமை ஏற்பார்’ என்று பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ”இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளில் சுமார் 150 படகுகள் மீண்டும்...

அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதே சிறந்தது: விஜயகலா மகேஸ்வரன்

அரசாங்கத்தை குறை கூறுவதனால் எந்ததொரு பயனும் ஏற்படப்போவதில்லை. ஆகையால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதே சிறந்ததென முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்துகொண்டு, உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொள்ள...

குழு தாக்குதலில் இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம்,ஏழாலை பகுதியிலுள்ள சகோதர்கள் இருவர் மீது வலி.தெற்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்தியதில் அவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏழாலை மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ஏழாலை வடக்கை சேர்ந்த செல்வராசா அரவிந்தன் (வயது 25) மற்றும்...

அரசாங்கத்தின் செயற்பாடு மனித நீதிக்கு எதிரானது: அருட்தந்தை சக்திவேல்

தடுப்பிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 100இற்கு 99 வீதமானவர்கள் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் இது மனித நீதிக்கு எதிரானதென்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள நடைபவணி இன்று (சனிக்கிழமை) அநுராதபுரத்தை சென்றடைந்தது. குறித்த...

அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்: டக்ளஸ்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அரசாங்கம் தமது நல்லெண்ணத்தை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடை பவணி, இன்று (சனிக்கிழமை) அநுராதபுரத்தை சென்றடைந்துள்ளது. இந்நிலையில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம்...

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தமிழ் தலைமைகள் வலியுறுத்த வேண்டும் – முதலமைச்சர்

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யத்தவறின் வரவு செலவு திட்டத்தை நிராகரிப்போம் என்ற அழுத்தத்தினை தமிழ் தலைமைகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைத்துள்ளதுடன், உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல் நிலையை கருத்திற்கொண்டு, உண்ணாவிரதத்தினை கைவிடுமாறும் சிவில் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அனுராதபுரம் சிறையில் கடந்த 29 நாட்களாக தமிழ்...
Loading posts...

All posts loaded

No more posts