கிளிநொச்சி மருத்துவமனையில் இரண்டாவது மகப்பேற்று நிபுணர் கடமையேற்பு!!

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் நேற்றையதினம் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணரும் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

கிளி­நொச்சி மாவட்ட மருத்­து­வ­ம­னை­யில் கடந்த சில மாதங்­க­ளுக்கு முன் மகப்­பேற்று மருத்­துவ நிபு­ணர் இல்­லாத நிலை­யில் கர்ப்­பி­ணித் தாய்­மார்­கள் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்­டி­ருந்­த­னர்.

இந்த நிலை­யில் கடந்த மாதம் 17 ஆம் திகதி மத்­திய சுகா­தார அமைச்­சி­னால் மகப்­பேற்று மருத்­துவ நிபு­ணர் டி.எல்.டபிள்யூ.குண­வர்த்­தன நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தார்.

இதன் தொடர்ச்­சி­யாக மத்­திய சுகா­தார அமைச்­சி­னால் மேலும் ஒரு மகப்­பேற்­றி­யல் நிபு­ணர் கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னைக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

இதன்­ப­டி­ ம­ருத்­துவக் கலா­நிதி எம்.ஆர். விதா­ன­தந்­தி­ரிகே நேற்று கிளி­நொச்சி ,மருத்­துவ மனை­யில் தனது கட­மை­க­ளைப் பொறுப்­பேற்­றுக் கொண்­டுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது.

இந்த நிய­ம­னத்­து­டன் கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னை­யில் இரண்டு மகப்­பேற்­றி­யல் நிபு­ணர்­கள் கட­மை­யில் இருப்­பார்­கள் எனச் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

Related Posts