Ad Widget

குழு தாக்குதலில் இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம்,ஏழாலை பகுதியிலுள்ள சகோதர்கள் இருவர் மீது வலி.தெற்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்தியதில் அவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏழாலை மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ஏழாலை வடக்கை சேர்ந்த செல்வராசா அரவிந்தன் (வயது 25) மற்றும் அவரது சகோதரனான செல்வராசா சஜீவன் (வயது 18) ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் வைத்திய சாலை பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாவது, “வீட்டில் இருந்த தம்மை, பிரதேச உறுப்பினர் தொலைபேசி ஊடாக அழைத்திருந்தார்.

அதன் பிரகாரம் நாம் அங்கு சென்றபோது, அவரும் அவருடன் நின்ற ஐந்திற்கும் மேற்பட்டவர்களும் எம்மை தாக்கினார்கள்” என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts