Ad Widget

யாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நைய புடைப்பு!

யாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மடக்கி பிடிக்கப்பட்ட கொள்ளையர்களை அப்பகுதி இளைஞர்கள் நையப் புடைத்திருந்ததுடன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திருநெல்வேலி பகுதியில் 2 ஆலயங்களிலும் 3 வீடுகளில் கடந்த இரு நாட்களில் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது. இந்த கொள்ளைகளில் ஈடுபட்ட கொள்ளையர்களின் தெளிவான அடையாளங்களுடன் கூடிய சீ.சீ.ரி.வி ஆதாரங்கள் மீட்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் குறித்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக இளைஞர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் 4 பேர் நேற்று மாலை நடமாடியுள்ளனர்.

அவர்களை மறித்த இளைஞர்கள் விசாரித்ததுடன் அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்டபோது கோவிலில் மீட்கப்பட்ட பித்தளை பொருட்களை இளைஞர்கள் மீட்டனர்.

பின்னர் கொள்ளை சம்பவம் தொடர்பான சீ.சீ.ரி.வி காட்சிகளை பார்த்து பிடிபட்டவர்களே கொள்ளையர்கள் என அடையாளம் கண்டதை தொடர்ந்து கொள்ளையர்களை இளைஞர்கள் பிடித்து கட்டுவதற்கு முயற்சித்தபோது இருவர் தப்பி ஓடியுள்ளனர்.

எனினும் அகப்பட்ட இருவரையும் நையபுடைத்த இளைஞர்கள் அவர்களை மின் கம்பத்துடன் கட்டி வைத்தனர். பின்னர் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த கொள்ளையர்ரகளை கைது செய்தனர்.

Related Posts