- Saturday
- May 9th, 2026
வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆளுநரிடம் விடுத்த எழுத்துமூலமான குற்றசாட்டு தொடர்பாக இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளன. சுகார அமைச்சின் செயலாளர் திருவாகரன், வடமாகாண கணக்காய்வுத் திணைக்கள பணிப்பாளர் எஸ்.சுரேந்தினி, மாகாண சுகாதார திணைக்கள கணக்காளர் கஜேந்திரன் ஆகியோர் இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். எதிர்வரும் இரு வாரங்களுக்குள் விசாரணைகளின் அறிக்கையினை சமர்பிக்குமாறு ஆளுநர் றெஜினோல்ட் குரே விசாரணை அதிகாரிகளை...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். நாத்தாண்டியா, ஹமில்டன் கால்வாயில் குறித்த சொகுசு பேருந்து நேற்று (வியாழக்கிழமை) விபத்திற்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்தனர். அவர்களில் மூவர் பெண்களாவர். மேலும் 20 பேர் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்திய மீன்பிடிப் படகு ஓர் ஒன்று இலங்கை கடற்படைக் கப்பலுடன் மோதுண்டது தென் நெடுந்தீவில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்குச் சொந்தமான நீர்ப்பரப்பில் நேற்று (வியாழக்கிழமை) சட்டவிரதோமாக மீன்பிடியில் ஈடுபட்ட சுமார் 30 படகுகளுடன் இலங்கைக் கடற்படைக் கப்பல் கூடப் பயணித்தபோதே இத்துயர நிகழ்வு இடம்பெற்றது. இதற்க்கு படகுகளின் தடுமாற்றத்தாலும் இச் சமபவம்...
நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியுள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஒக்ரோபர் 26ஆம் திகதிக்கு முன்னைய ஐக்கிய தேசிய முன்னணி அரசு அமைவதற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. இவ்வாறு அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“எழு நீ“ நிகழ்விற்கு தமிழ் மக்கள் கூட்டனியின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகான அமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரனை அழைத்தமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் குறித்த நிகழ்வினையும் புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. வவுனியா நகரசபைக்கு ஒரு கோடி ரூபா இழப்பை ஏற்படுத்தியதுடன் பல பேரின் வேலைவாய்ப்புக்களையும் இழக்கச் செய்து பல வர்த்தக நிலையங்களை மூடச் செய்த முன்னாள்...
யாழ்ப்பாணம் – வைமன் வீதியில் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் வீட்டில் தரித்து வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. ஆரியகுளம் சந்தியில் வாகானம் திருத்தும் உரிமையாளர் ஒருவரின் வீட்டிலேயே இந்த சம்பவம்...
பிரதமர் அலுவலகத்திற்கான நிதியை இடைநிறுத்தும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரச நிதியின் மூலம் செலவீனங்களை மேற்கொள்ள பிரதம செயலாளருக்கு அதிகாரம் இல்லையென தெரிவிக்கப்பட்டு குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த பிரேரணை மீது விவாதம் நடத்தப்பட்டு அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக...
தமிழரின் மரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம் தவராசா இன்று அதிகாலை காலமானார். அவரதுக்கு வயது 69. வடமராட்சி பொலிகண்டி கிழக்கைச் சேர்ந்த சிவலிங்கம், தமிழரின் மரபுக் கலைகளான சிலம்பாட்டம், உடுக்கு போன்றவற்றில் பாண்டித்தியம் பெற்றவராகத் திகழ்தார். அவரால் பல மாணாக்கர்கள்...
லீசிங் தவணைப் பணத்தை வசூலிப்பதற்காக வாடிக்கையாளரின் வீடு தேடிச் சென்று வீட்டிலிருந்த குடும்பப்பெண்ணை அச்சுறுத்திவிட்டு அவரது தங்க நகைகளை அறுத்துச் சென்றனர் என்ற குற்றத்துக்கு நிதி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் இருவருக்கு ஒரு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்தார். “நிதி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், தவணைப் பணத்தை வசூலிப்பதற்கு...
ஆவா குழுவின் தலைவர் என அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மோகன் அசோக் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்றையதினம் சரணடைந்த நிலையில் அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய், சுன்னாகம், யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அவருக்கு மல்லாகம் நீதிவான்...
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில...
வாள்வெட்டுக்கும்பலுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தொடர்புள்ளதா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ் ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை நண்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கிலும் புலம் பெயர் தேசங்களிலும் செவ்வாய்க்கிழமை மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது....
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் புலனாய்வாளர் ஒருவர் கலந்து கொண்டு இன்னுயிர் நீத்த மாவீரர்களுக்கு மெழுகு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியமை அங்கிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களை...
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், தனது தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் நேற்று (புதன்கிழமை) பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மாகாண சபையின் பதவிக்காலம் ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல்...
சபாநாயகர் கரு ஐயசூரியவை ஆதரித்தும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன ‘நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி நிலைமையில் சபாநாயகரின் செயற்பாடுகள் தமக்கும் நாட்டிற்கும் பெருமை’ எனும் தலைப்பிடப்பட்ட சுவரொட்டிகளே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன. அத்தோடு குறித்த சுவரொட்டிகளில் நாடாளுமன்ற சம்பிரதாயங்கள், அதிகாரங்கள் மற்றும் மக்களின் அபிலாசைகளுக்கமைய நாட்டின் ஜனநாயகத்தை நிலை...
ஆவா குழுவின் தலைவர் என அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அசோக் என்ற இளைஞன் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று சரண்டைந்தார். வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய், சுன்னாகம் உள்ளிட்ட பொலிஸாரால் தேடபட்டு வந்த அவருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பல வழக்குகள் நிலுவையிலுள்ளன. அந்த வழக்குகளில் அசோக் மீது பிடியாணை...
பிள்ளைகளை அரச பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்கு நிதி மற்றும் பாலியல் ரீதியில் இலஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பில் தாமதிக்காமல் 1954 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்கள். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று (28) விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டிருந்ததாக, விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதனின் ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல்கைதிகளின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட விசேட குழுவான பிரதியமைச்சர்கள் காதர் மஸ்தான், ச.வியாழேந்திரன், இ.அங்கஜன் ஆகியோர் இன்று நாமல் ராஜபக்ச எம்.பியையும், நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவையும் சந்தித்து பேசியுள்ளனர். அரசியல்கைதிகளை...
பருத்தித்துறை சுப்பர்மடத்தில் நேற்று மாவீரர்தினத்தை ஒழுங்கமைத்து, படைத்தரப்பின் அச்சுறுத்தலையும் கணக்கிலெடுக்காமல் அஞ்சலி நிகழ்வை நடத்தியவரது வீடு நள்ளிரவில் தாக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு அவரது வீட்டுக்கு சென்ற இனம்தெரியாத நபர்கள், வீட்டு கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்டு சென்றுள்ளனர். நேற்று (27) பருத்தித்துறை சுப்பர்மடத்தில் பொதுமக்களால் மாவீரர்தின நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது. இதையறிந்த பருத்தித்துறை பொலிசார் அங்கு சென்று...
தேசிய மாவீரர் நாளை ஒட்டி கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்த போதிலும் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தமிழீழ மாவீரர் நாள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர்நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. இந்நிலையில் யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் கப்டன் வெண்ணிலவன், கப்டன்...
Loading posts...
All posts loaded
No more posts
