யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
நாத்தாண்டியா, ஹமில்டன் கால்வாயில் குறித்த சொகுசு பேருந்து நேற்று (வியாழக்கிழமை) விபத்திற்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்தனர். அவர்களில் மூவர் பெண்களாவர். மேலும் 20 பேர் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.