சபாநாயகர் கரு ஐயசூரியவை ஆதரித்தும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன
‘நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி நிலைமையில் சபாநாயகரின் செயற்பாடுகள் தமக்கும் நாட்டிற்கும் பெருமை’ எனும் தலைப்பிடப்பட்ட சுவரொட்டிகளே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன.
அத்தோடு குறித்த சுவரொட்டிகளில் நாடாளுமன்ற சம்பிரதாயங்கள், அதிகாரங்கள் மற்றும் மக்களின் அபிலாசைகளுக்கமைய நாட்டின் ஜனநாயகத்தை நிலை நிறுத்த அச்சமின்றி வீரத்துடன் கடமையாற்றியுள்ள சபாநாயகருக்கு நாட்டு மக்களின் ஆசீர்வாதங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.