கொள்கைகளின் உண்மை தன்மையை உணர்ந்தே பெரும்பாலானோர் அணியில் இணைகின்றனர்: விக்கினேஸ்வரன்

எமது கொள்கைகளின் உண்மை தன்மையினை உணர்ந்தே பெரும்பாலானோர் என்னுடன் அரசியல் பயணம் மேற்கொள்ள விரும்பி, இணைந்து வருகின்றனரென முன்னாள் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் விக்கினேஸ்வரன் கூறுகையில், ‘இன்று காலை எனக்கு பல தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. இன்று...

கோப்பாய் பொலிஸாரின் சித்திரவதையைத் தாங்க முடியாமல் இளைஞன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி!!

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நடந்த கொடுமைகளை அந்த இளைஞர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். சந்தேகநபரை பொலிஸார் சட்டவிரோதமாகத் தடுத்துவைத்திருந்தமை மற்றும் அவரைத் தாக்கியமை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், கோப்பாய்...
Ad Widget

புளியங்குளத்தில் பச்சிளம் குழந்தை கொலை!!

வவுனியா – புளியங்குளம், ஊஞ்சல்கட்டு பகுதியில், 8 மாத சிசுவொன்று கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குழந்தையை உறங்கச் செய்துவிட்டு தாயார் வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் குழந்தை காணாமற்போயுள்ளமை தெரியவந்தது. இதனையடுத்து, குழந்தையை உறவினர்கள் தேடினார்கள். குழந்தை அருகிலுள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. ​பின்னர் குழந்தை நெடுங்கேணி...

பொட்டம்மான் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் – கருணா பரபரப்பு தகவல்

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காரணமாகயிருக்கலாம் என கருணா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயுர் ஊட்டும் நடவடிக்கையிது எனவும் அவர்...

பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை விவகாரம் – கிளிநொச்சி பொலிஸில் ஒருவர் சரண்!

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒருவர் கிளிநொச்சி பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் சற்று முன்னர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் அடையாளம் தெரியாத...

அரசியல் நெருக்கடிக்கு இரு தினங்களில் ஜனாதிபதி முக்கிய தீர்மானம் எடுப்பார் – சம்பந்தன்

நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பது தொடர்பில் இன்னும் இரண்டொரு தினங்களில் ஜனாதிபதி முக்கிய தீர்மானம் ஒன்றை எடுப்பார் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது....

யுத்தத்தில் கண்பார்வை இழந்த முன்னாள் போராளிகள் வடக்கு ஆளுநருடன் சந்திப்பு!

யுத்தத்தில் கண்பார்வை இழந்த முன்னாள் போராளிகள் ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், அரசாங்க வேலைக்கான ஆட்சேர்ப்பின்போது 3 சதவீதமானவர்கள் மாற்றுத்திறனாளிகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தம்மையும் அரச வேலைவாய்ப்புக்களில் இணைத்துக்கொள்ளுமாறு ஆளுநரிடம் வேண்டிக்கொண்டனர். குறிப்பாக கரைச்சி பிரதேசசபை...

வவுனியா போராட்ட களத்தில் சர்வதேச ஊடகவியலாளர்கள்!

வெளிநாட்டு தலையீட்டைக் கோரி வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போன உறவினர்களை சர்வதேச ஊடகவியலாளர்கள் சந்தித்துள்ளனர். இதன்போது, 11 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர கைது செய்யப்பட்டமை, இவ்விடயத்தில் வெளிநாட்டு தலையீட்டை தடுக்கும் செயல் என உறவுகள் ஊடகவியலாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும்...

ஜனாதிபதியுடனான சந்திப்பு வெற்றி: ஐ.தே.க.

அரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு வெற்றியளித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ”தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்...

வவுனியாவில் விபச்சாரத்தால் எய்ட்ஸ் தொற்று! இதுவரையில் 13 பேர் பலி!!

வவுனியாவில் விபச்சாரத்தால் எய்ட்ஸ் தொற்று ஏற்படுவதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல் நோய் தடுப்பு பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். உலகம் முழுவதும் எயிட்ஸ் தினம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி நினைவுகூறப்படுகின்றது. அந்தவகையில் இலங்கையில் இம்முறை...

விடுமுறை எடுக்காத ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா அவசியம் – ஆளுநர்

வடமாகாணத்தில் அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களை பாராட்டுவதற்கான விழா ஒன்றினை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். மருதனார் மடம் இராமநாதன் கல்லுாரியில் வலிகாமம் வலயகல்வி அலுவலகம் நடத்திய ஆசிரியர் கௌரவிப்பு விழா கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர்...

அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படும் இணக்கப்பாட்டின் மூலமே நிரந்தரத் தீர்வு: சுமந்திரன்!

அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படும் இணக்கப்பாட்டின் மூலமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வினை அடைய முடியும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு நாட்டினுடைய அரசியலமைப்பு...

தமிழர்களுக்குத் தீர்வில்லாமற் போனமைக்கு கூட்டமைப்பே காரணம்: பந்துல

தமிழர்களுக்கு இதுவரை தீர்வு கிடைக்காமல் போனமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகச் செயற்படுவதே தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக...

யாழில்.பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது!

பெரும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த சட்டவிரோதக் குழுவைச் சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 3 அடி நீளமுள்ள 7 வாள்களும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மையில் வடமராட்சி இமயாணன் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தாக்கப்பட்ட சம்பவத்துடன் சந்தேகநபர்கள் மூவருக்கும் தொடர்புள்ளமை விசாரணைகளில்...

ஐ.தே.க.வை ஆதரிக்கும் கூட்டமைப்பின் முடிவு ஏமாற்றும் செயல்: சுரேஷ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜக்கிய தேசியக் கட்சியினது அரசாங்கத்தை ஆதரிக்கும் முடிவானது தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) தனது இல்லத்தில் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...

எரிபொருள்களின் விலை குறைகிறது!

பெற்றோல் மற்றும் டிசெலின் விலைகள் இன்று (30) வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் தலா 5 ரூபாவால் குறைக்கப்படுகிறது என்று நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெற்றோல் 92 மற்றும் 95 ஒக்ரைன், டிசெல் சுப்பர் மற்றும் ஓட்டோ என்பனவற்றின் விலைகள் தலா 5 ரூபாவால் குறைக்கப்படுகிறது. இதன்மூலம் 92 ஒக்ரைன் பெற்றோலின் விலை 135 ரூபாவாகும்...

யாருடைய ஜனநாயகத்தை பாதுகாக்கிறீர்கள்?: கூட்டமைப்பிடம் கேள்வியெழுப்பும் சி.தவராசா!

“இன்று ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற கோசம் பலராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனாலேயே இன்று ஐ.தே.முன்னணிக்கு ஆதரவை வழங்கி ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக கூட்டமைப்பும் பெருமிதமடைகின்றது. எம் நாட்டில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மை இனத்தவர்களின் ஜனநாயகமாகவே இன்றுவரை காணப்படுகின்றது. சகல இனத்தவர்களையும் உள்ளடக்குகின்ற ஜனநாயகம் நாட்டில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு பிரச்சினைகளையும், அழிவுகளையும் சந்தித்திருக்க வேண்டிய தேவையில்லை. ஆகவே நாம்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழை : மக்கள் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழையால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். துணுக்காய் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று உதவிகள் வழங்கப்பட்டன. அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தம் ஏற்படும் போது எங்களை நாங்களே...

இரு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை : கருணா அம்மானுக்கு தொடர்பா?

மட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்பதாக, நளின் பண்டார மற்றும் சுமந்திரன் எம்.பி.கள் பாராளுமன்றில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்து கேள்வியெழுப்பியுள்ளனர். இன்றைய பாராளுமன்ற அமர்வில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த பிரேரணை மீதான...

நாட்டின் நன்மைக் கருதியே கூட்டமைப்பு தீர்மானம் எடுத்தது – சுமந்திரன்

நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையைக் கருத்திற் கொண்டு ஐக்கிய தேசிய முன்னனி பரிந்துரைக்கும் ஒருவருக்கு ஆட்சியமைக்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவிப்பதாக கூறியது. மாறாக ஐக்கிய தேசிய முன்னிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்கு...
Loading posts...

All posts loaded

No more posts