Ad Widget

யாழில்.பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது!

பெரும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த சட்டவிரோதக் குழுவைச் சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து சுமார் 3 அடி நீளமுள்ள 7 வாள்களும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் வடமராட்சி இமயாணன் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தாக்கப்பட்ட சம்பவத்துடன் சந்தேகநபர்கள் மூவருக்கும் தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்கள் மூவரும் 24 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் மூவரும் கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் கடந்த சில தினங்களால் 20இற்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts