அரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு வெற்றியளித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ”தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பில் எதிர்வரும் தினங்களில் அறியத்தரப்படும்.
எவ்வாறாயினும், பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.