Ad Widget

வவுனியாவில் விபச்சாரத்தால் எய்ட்ஸ் தொற்று! இதுவரையில் 13 பேர் பலி!!

வவுனியாவில் விபச்சாரத்தால் எய்ட்ஸ் தொற்று ஏற்படுவதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல் நோய் தடுப்பு பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

உலகம் முழுவதும் எயிட்ஸ் தினம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி நினைவுகூறப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கையில் இம்முறை ஓவ்வொருவரும் தனக்கு எய்ட்ஸ் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்து அறிவதன் மூலம் 2025 ஆம் ஆண்டளவில் அதனை முற்றாக ஒழித்தல் என்னும் தொனிப் பொருளில் நடைபெறுகிறது.

வவுனியாவில் பாலியல் நோய் தடுப்பு பிரிவு எயிட்ஸ் விழிப்புணர்வு செயற்திட்டத்தை முன்னெடுத்துவருகிறது.

2003 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வவுனியாவில் 20 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதில் 2018 ஆம் ஆண்டு ஓருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதில் 7 பேர் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ச்சியாக மருந்து பாவிப்பதன் ஊடாகவே உயிர் வாழ்கின்றனர்.

இந்த எச்.ஐ.வி தொற்று மூன்று முறைகளில் வேகமாக பரவுகிறது. எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களுடனான பாலியல் ரீதியான தொடர்புகள், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களின் இரத்தம் பிறிதொரு நபருக்கு மாற்றுதல், எச்.ஐ.வி தொற்றுள்ள ஓரு அம்மாவுக்கு பிறக்கும் குழந்தை என்பவற்றின் ஊடாக வேகமாக பரவிவருகிறது.

ஆனால், வவுனியாவை பொறுத்தவரை விபச்சாரம் காரணமாகவே எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனை இனங்காண ஓன்று தொடக்கம் மூன்று மாதங்கள் தேவை. அந்த இடைவெளிக்குள் அவர்கள் மூலம் பலருக்கும் தொற்றி விட வாய்ப்புள்ளதாகவும் வவுனியா மாவட்ட பாலியல் நோய்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார்.

Related Posts