கைபேசி தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ முறையிட பொலிஸாரின் புதிய இணையத்தளம்!

கைபேசி காணாமற்போனால் அல்லது திருட்டுப் போயிருந்தால் அதுதொடர்பில் உனடியாக முறைப்பாட்டை வழங்கும் வகையில் இலங்கை பொலிஸார் புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். www.ineed.police.lk என்ற புதிய இணையதளமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் அறிவுரைக்கமைய இந்த இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். இணையத்தளத்துக்குள் சென்று முறைப்பாட்டாளர் தனியான கணக்கை...

ஜனாதிபதிக்கு மனநலக் கோளறுப் பரிசோதனைவேண்டும் – பொலிஸ் மா அதிபருக்கு கட்டளை?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு மனுவொன்றை தாக்கல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருக்கு மனநலக் கோளாறு உண்டு என்பதை ஆராயுமாறு நீதித் துறையை நாடப்பட்டுள்ளது. மன நலக்கோளாறு கட்டளைச் சட்டத்தின் 2ஆம் அத்தியாயத்துக்கு அமைய ஜனாதிபதி...
Ad Widget

பல்கலை. மாணவர்கள் படுகொலை: அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாகததால் விசாரணைகள் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணை அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாகததால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று ஒத்திவைத்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்....

ஜனவரி 1ம் திகதியிலிருந்து யாழில் முச்சக்கரவண்டி, ரக்ஸிகளில் மீற்றர்: கட்டண விபரம் உள்ளே!

யாழ் மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளிற்கும், வாடகை ரக்ஸிகளிற்கும் கட்டண மீற்றர் கட்டாயம் பொருத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஜனவரி 1ம் திகதியிலிருந்து அறவிடப்பட வேண்டிய கட்டண விபரங்களை யாழ் மாவட்ட செயலகம் அறிவிக்கவுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு உள்ளூராட்சி மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர்,...

யாழ் வீட்டுத் திட்டத்தில் அரசியல் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை – நா.வேதநாயகன்

யாழ்.மாவட்டத்தில் வழங்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் அரசியல் சிபாரிசுகளை கணக்கில் எடுக்காது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் என உறுதி செய்யப்பட்டவர்களுக்கே வீட்டு திட்டம் வழங்கப்படும் . என யாழ் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் அரசியல் கட்சி அலுவலகங்களில் வீட்டுத் திட்டம் தொடர்பில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். என குற்றசாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பில்...

மீண்டும் தமிழ் மக்கள் கொல்லப்படலாம்: அனந்தி சசிதரன்

போர்க்குற்றம் மற்றும் இன அழிப்பிற்கு அரசாங்கம் பொறுப்புக் கூறவில்லை என்றால், தமிழர்கள் மீண்டும் கொல்லப்படலாம் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் அச்சம் வெளியிட்டுள்ளார். எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உட்பட விடுதலைப் புலி உறுப்பினர் சிலரின் ஆட்கொணர்வு வழக்கு நேற்று (திங்கட்கிழமை) வவுனியா நீதிமன்றில் நடைபெற்றது. நேற்றைய வழக்கு விசாரணைக்கு சென்ற...

சுன்னாகத்தில் பெற்றோல் குண்டு வீச்சு!

சுன்னாகம் பிரதேசத்தில் இயங்கி வந்த உடற்பயிற்சி நிலையம் ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் பொலிஸ் நிலையத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையிலேயநேற்று (திங்கட்கிழமை) மாலை குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வளாகத்துக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல்,...

மக்கள் குடிமனைக்கு நடுவில் சுன்னாகம் பொலிஸார் வேண்டாம்!

சுன்னாகத்தில் பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக குடிமனைக்கு நடுவில் உள்ள பொது மக்களின் காணியை சுவீகரிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் உடுவில் பிரதேச செயலகம் முன்பாக இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த காலங்களில் கடத்தல், சித்திரவரை மற்றும் கொலை போன்ற மனிதத்துவத்திற்கு எதிரான பல செயற்பாடுகளை முன்னெடுத்த சுன்னாகம்...

இரணைமடு குளத்தில் டி.எஸ்.சேனாநாயக்கவின் நினைவு கல்லினை மீளவும் நிறுவ நடவடிக்கை

இரணைமடு குளத்தில் 1954ம் ஆண்டு நிறுவப்பட்ட நினைவு கல்லினை மீளவும் அதே இடத்தில் நிறுவுமாறு இரணைமடு நீர்பாசனத்திட்டத்தின் பொறியியலாளர் எஸ்.சுதாகரனுக்கு வடமாகாண ஆளுனர் பணித்துள்ளார். 1954ம் ஆண்டு இரணைமடு புனரமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க ஆகியோரின் பெயர் பதிக்கப்பட்ட நினைவுக்கல் நிறுவப்பட்டடிருந்தது. இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றிருந்த...

காற்றழுத்த தாழமுக்கத்தின் தாக்கத்தால் 12-16ஆம் திகதிகளில் மழைக்கு வாய்ப்பு

இலங்கைக்கு தென் கிழக்கே வங்கக்கடலில் உருவாகியுள்ள அதிதீவிர காற்றழுத்த தாழ்வுநிலை வரும் 12ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதிவரையான 5 நாள்களுக்கு இந்தியப் பெருங்கடலில் விரிவடையவுள்ளது. அதனால் இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் கன மழை பொழியும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர் அத்துடன், தாழ்வு மண்டலம் விரிவடைந்தால் சூறாவளியாக மாறவும் வாய்ப்புள்ளது. இலங்கை, தமிழகம்...

இளைஞனைப் பலியெடுத்த இரணைமடுக்குளம்!!

கிளி­நொச்சி இர­ணை­ம­டுக் குளத்­தின் வான் பாயும் பகு­திக்­குள் குளித்­துக் கொண்­டி­ருக்­கும் போது காணா­மல் போன இளை­ஞன் சில மணி நேரத் தேடு­த­லின் பின்­னர் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ளார். சாவ­கச்­சேரி மீசா­லை­யைச் சேர்ந்த என்.டிலக்­சன் (வயது-21) என்ற இளை­ஞனே உயி­ரி­ழந்­துள்­ளார். நேற்று மாலை 4.30 மணி­ய­ள­வில் இர­ணை­ம­டுக் குளத்­தின் நான்கு வான்­க­த­வு­கள் திறக்­கப்­பட்­டன. இடது பக்­கம் இரண்டு கத­வு­க­ளும்,...

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெளியேற்ற மாட்டோம்: விக்கினேஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், குறித்த இரு கட்சிகளும் பேரவையில் தொடர்ந்தும் இருக்கலாமென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள்...

தமிழ் மக்கள் பேரவையில் ஒருங்கிணைந்து செயற்படத் தீர்மானம்: சுரேஸ்

தமிழ் மக்கள் பேரவையில் இருக்கின்ற கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் என சகலரும் ஒருங்கிணைந்து செயற்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பேரவையின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர்...

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளரின் தாய் மரணம்!

யாழ்ப்பாணம் – துன்னாலையில் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் ஒருவரின் தாய் மரணித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தாயார் சுப்பிரமணியம் அம்பிகையே (83 -வயது) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மரணித்துள்ளார். இராமச்சந்திரனின் தந்தையார் சுப்பிரமணியம் மரணித்து ஒரு மாதமே ஆன நிலையில் தற்போது தாயாரும் காலமாகியுள்ளார். தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் இறுதிக்கட்ட...

வைத்தியசாலையில் தங்கியிருந்தபடி நோயாளர் காவு வண்டியில் சென்று பரீட்சை எழுதும் மாணவி

டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியொருவர், க.பொ.த. சாதாரணதர பரீட்சை எழுதிவருகிறார். குறித்த மாணவி நோயாளர் காவு வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு வந்து, பரீட்சை எழுதி வருகிறார். யாழ் நகரிலுள்ள மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவியொருவர் திடீரென டெங்கு நோய்த்தொற்றிற்கு இலக்காகியுள்ளார். இதனையடுத்து சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பரீட்சைக்கு...

ஓய்வூதியத்தை எண்ணி செயற்படுபவர்களால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது: ரெஜினோல்ட் குரே

அரசாங்க வேலையில் இணைந்து கொள்ளும் அனைவரும் பின்னர் ஓய்வூதியத்தை எண்ணி பணி புரிவதனால் மக்களுக்கு நல்ல சேவையினை வழங்க முடியாத நிலைமை தற்போது உருவாகியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்- கைதடி பகுதியில் இடம்பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வொன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...

இரணைமடுவை மகாவலியுடன் இணைக்க அரசியல் சூழ்ச்சி: ஐங்கரநேசன்

மாகாண அரசுக்கு சொந்தமான இரணைமடு குளத்தை மத்திய அரசாங்கம் முற்றாக கைப்பற்றிக்கொள்ளும் சூழ்ச்சி இடம்பெற்றுவருவதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாணத்திற்கு நீரை விநியோகிக்கின்றோம் என்ற பெயரில் இரணைமடுவை மகாவலியுடன் இணைத்து, மகாவலி அதிகார சபைக்கு சொந்தமாக்கி, ஏற்கனவே கொக்குளாய், நாயாறில் நடந்ததைப் போன்ற குடியேற்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்....

இரணைமடுக் குளத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்படுகின்றன – அவதானமாக இருக்குமாறு மக்களிடம் கோரிக்கை

இரணைமடுக் குளத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், அதன் ஆறு வான் கதவுகள் இன்று முற்பகல் 11 மணியளவில் திறக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தாழ்வான பகுதிகளான பன்னங்கண்டி, ஊரியான் , முரசுமோட்டை, வட்டக்கச்சி பண்ணைப் பகுதி மற்றும் கண்டாவளை ஆகிய பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசத் திணைக்களம் கேட்டுள்ளது. இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் நேற்றுப்...

வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் – பெண் காயம்!!

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி, கல்வியற்கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் குடும்பப் பெண் ஒருவர் கையில் எரிகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன், வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனம், முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்தச் சம்பவம் நேற்று இரவு 11...

முற்றவெளியில் வடக்கு கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்!!

வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் கைத் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் கண்காட்சி வடக்கு மாகாண இணைப்பாளர் கு,ரவிக்குமார் தலைமையில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சுமற்றும் தேசிய கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றமும் இணைந்து இந்தக் கண்காட்சியை நடாத்துகின்றன. இந்தக்...
Loading posts...

All posts loaded

No more posts