- Saturday
- May 9th, 2026
இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு இலங்கை இராணுவம் விளக்கமளிக்க வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் 2019 மே 17 முதல் 19 வரை காணாமல் ஆக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம்...
பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்த யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி பெரும்பான்மையால் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள மாநகர சபையின் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு வரும், வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்படுமென எதிர்வு கூறப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக தமிழ்த்...
2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை தேசியப் பாடசாலைகளில் தரம் 6இல் இணைப்பதற்கான வெட்டுப்புள்ளியை கல்வி அமைச்சு வெளியிட்டது. வடக்கில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளி 176 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய இரண்டுக்கும் 164 புள்ளிகள்...
வட்டுக்கோட்டை கிழக்கில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு என்று வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் முறைப்பாட்டாளரின் மகள்தான் நகைகளைத் திருடினார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வட்டுக்கோட்டை கிழக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு என வீட்டின் குடும்பத்தலைவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார்...
தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த இலங்கையைச் நேர்ந்த 42 பேர் தாயகம் திரும்பியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்துள்ளார். 19 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நாடு திரும்பியதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், மூன்று...
ஐக்கிய தேசியக் கட்சியுடனான ஒப்பந்தம் தொடர்பில் கூட்டமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. பொறுப்புக்கூறல், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்தே ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்ததாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பு இரகசிய ஒப்பந்தம் செய்து தமிழீழத்தை அடையப் போவதாக மஹிந்த...
தமிழ் மக்களை ஓரங்கட்டும் செயற்பாட்டினை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பளை பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி மற்றும் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள் பொது...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக செயற்படுவதற்கு நம்பிக்கைக்கு உரியவர் என்று நாடாளுமன்றத்தால் நம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஜேவிபி வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வைப்...
யாழ்.பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று ( செவ்வாய்க்கிழமை) இரவு கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்கள், அதே பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இரண்டாம்...
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு பிராந்திய சாலை நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பிராந்திய முகாமையாளரை மாற்றுமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. போக்குவரத்துச் சபையின் வடக்கு பிராந்திய இணைந்த தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டோர்...
இலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது.குறித்த விடுமுறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 7ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது. அந்தவகையில் 2019ஆம் ஆண்டின் புத்தாண்டின் பின்னர் ஜனவரி 7ஆம் திகதி நாட்டின் சகல நீதிமன்றங்களும் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் ஆகையால் தான் இலங்கையிலுள்ள உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் மிகவும்...
அரசாங்கத்தின் தரப்பாக ஒருபோதும் செயற்படப் போவதில்லை என்றும், தாம் எப்போதும் எதிர்க்கட்சியிலேயே செயற்படப் போவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தமது நிலைப்பாடு குறித்த கடிதத்தை சபையில் சமர்ப்பித்த அவர், தமிழ், சிங்கள...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையில் தெற்கே தெய்வேந்திர முனையில் ஆரம்பித்த நாட்டில் சமாதானமும் சாந்தியும் வேண்டி கோப்ரல் கருணாரட்டவின் முச்சக்கரநாற்காலி வண்டி பயணமானது நேற்று பிற்பகல் 4 மணியளவில் பருத்தித்துறை பேதுறு முனையில் நிறைவு பெற்றது. பருத்தித்துறை பேதுறு முனையை சென்றடைந்ததும் நான்கு மத தலைவர்களின் ஆசிர்வாத பிரார்த்தனைகளுடன் நிறைவு விழா இடம்பெற்றது....
மன்னார் மனித புதை குழியிலிருந்து இது வரை 21 சிறுவர்களுடைய மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அகழ்வுப் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். இந்தப் புதை குழியில் இருந்து இதுவரை 276 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில்...
அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாகவும், விரைவாகவும் நடைமுறைப்படுத்துவதற்குரிய அழுத்தத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தாவினால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு நேற்று (செவ்வாய்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு...
இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் கோரிக்கைக்கு அமையவே தமிழ் தேசிய கூட்டமைப்பு, ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவரை், “ஆட்சியாளர்களை தீர்மானிக்கின்ற விடயத்திலே இன்று...
யாழிலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி ஒருவரின் வீட்டில் துணிகர திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வீட்டிலிருந்த பொருட்களும் ஒரு தொகைப் பணமும் திருட்டுக் போயுள்ளதாக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ் மாநகர சபைக்கு முன்னாலுள்ள மாநகர சபை குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றில் தனியே தங்கி...
கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பிற்காக நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் இனரீதியிலான வெட்டுப்புள்ளி வழங்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக இப்படியொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிங்களவர் 105, முஸ்லிம்கள் 120, தமிழர்கள் 130 என்ற அடிப்படையில் வெட்டுப்புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கவனத்திற்கு கொண்டு...
யாழ். மாநகர சுகாதாரப் பிரிவினரால் வண்ணார்பண்ணைப் பிரதேசத்தில் 34 குடியிருப்பாளர்களின் சுற்றாடலை உடனடியாக துப்பரவு செய்யக் கோரி சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினர் வண்ணார்பண்ணை பிரதேசசத்தில் மேற்கொண்ட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 332 வரையிலான வீடுகள் பார்வையிடப்பட்டுள்ளன. ஜே - 97 ஜே - 101 ஆகிய கிராம சேவகர்...
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமது ஆதரவினை வழங்கி வருமாகவிருந்தால் எதிர்க்கட்சியிலிருந்து கூட்டமைப்பு விலக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இலங்கை அரசியல் தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை...
Loading posts...
All posts loaded
No more posts
