Ad Widget

வண்ணார்பண்ணையில் 34 குடியிருப்புகளுக்கு சிவப்பு அறிவித்தல்

யாழ். மாநகர சுகாதாரப் பிரிவினரால் வண்ணார்பண்ணைப் பிரதேசத்தில் 34 குடியிருப்பாளர்களின் சுற்றாடலை உடனடியாக துப்பரவு செய்யக் கோரி சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினர் வண்ணார்பண்ணை பிரதேசசத்தில் மேற்கொண்ட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 332 வரையிலான வீடுகள் பார்வையிடப்பட்டுள்ளன. ஜே – 97 ஜே – 101 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இந்த நுளம்புக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது ஆறு குடியிருப்பாளர்களின் சுற்றாடலில் நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் காணப்பட்டது.

மாநகர பிரதேசத்தில் டெங்கின் தாக்கம் அதிமாக காணப்படும் பிரதேசசங்களில் தொடர்ந்தும் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts