Ad Widget

மேற்குல நாடுகளின் கோரிக்கைக்கு அமையவே கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு – கஜேந்திரன்

இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் கோரிக்கைக்கு அமையவே தமிழ் தேசிய கூட்டமைப்பு, ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவரை், “ஆட்சியாளர்களை தீர்மானிக்கின்ற விடயத்திலே இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கும் குழப்பங்களில் தமிழரினுடைய பிரதிநிதிகளின் பங்கு என்பது முக்கியமானதொரு துருப்புச் சீட்டாக காணப்படுகின்றது.

குறிப்பாக நாடாளுமன்றத்தில் பிரதமரை நியமிக்கின்ற விடயத்தில் யார் பிரதமர் என்பதை தீர்மானிப்பதில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியதொரு சூழ்நிலையில் தமிழ் பிரதிநிதிகளின் வாக்கு என்பது மிக முக்கிய துருப்புச் சீட்டாக காணப்படுகின்றது“ என தெரிவித்துள்ளார்.

Related Posts