முல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி விடுவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது. நேற்று (செவ்வாய்கிழமை) மாலை முல்லைத்தீவு இராயப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற இராணுவத்தின் நத்தார் கரோல் கீத நிகழ்வின் போது, புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பகுதிகளில் இராணுவம் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு மே...

வடமராட்சி கிழக்கில், முதியவரைக் கடத்திய இராணுவத்தினர்!! மக்களால் நையபுடைபப்பு!!

யாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவர் ஒருவரை கடத்திய இராணுவ சிப்பாய்கள் உட்பட 7 பேரை பொதுமக்கள் பிடிக்க முற்பட்ட வேளை 3 பேர் தப்பி சென்றுள்ளனர். இந்த நிலையில் 4 பேரை பிடித்த மக்கள், நையபுடைத்த பின்னர் காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு...
Ad Widget

எதிர்க்கட்சித் தலைவரானார் மஹிந்த!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள கட்சிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். அத்துடன் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர்...

தெற்­கைச் சேர்ந்த 46 பேருக்கு வடக்­கில் ரக­சிய நிய­ம­னங்­கள்!!

கடந்த ஒக்­ரோ­பர் மாதத்­துக்­குப் பின்­னர் வடக்கு மாகா­ணத்­தில் பெரும்­பான்­மை­ இனத்­தைச் சேர்ந்த 46 பேருக்கு இலங்கை மின்­சார சபை­யில் நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. கடந்த ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திகதி நாட்­டில் ஏற்­பட்ட அர­சி­யல் குழப்­பத்­தின் பின்­னர் மகிந்த தலை­மை­யில் அமைச்­ச­ரவை ஒன்று அமைக்­கப்­பட்­டது. அதில் எரி­பொ­ருள் மின்­சக்தி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட சியம்­ப­லாப்­பிட்­டிய இந்த நிய­ம­னங்­களை வழங்­கி­யுள்­ளார்...

முல்லைத்தீவு கடலில் கரை ஒதுங்கிய புலிக்கொடி

முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரை பகுதியில் தமிழீழ தேசிய கொடியான புலிக்கொடி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இன்றைய தினம் காலை குறித்த புலிக்கொடி கரை ஒதுங்கியுள்ளது.இதனை தொடர்ந்து மீனவர்களால் பொலிஸாருக்கு வழங்கப்படட தகவலுக்கு அமைய புலிக்கொடி மீட்க்கப்பட்டு பொலிஸாரால் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் சில பகுதிகளில் கடல் கொந்தளிப்பால் கடல் நீர் பெருக்கெடுப்பு

யாழ்ப்பாண குடாநாட்டில் கடல் கொந்தளிப்பு காரணமாக கிராமங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்துள்ளது. தொண்டமானாறு கடல்நீரேரி பெருக்கெடுத்ததினால் அச்சுவேலி – வல்லை கிராமத்துக்குள் கடல்நீர் பெருக்கெடுத்து வருகிறது. அடுத்து பருத்தித்துறை பகுதியில் உள்ள முனைப்பகுதி கடலரிப்புக்கு உள்ளாகி வருவதுடன் அங்கு கடல் நீர் உட்புகுந்ததால் மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகள் நீரில் இழுத்து செல்லப்பட்டுள்ளன. இது தவிர...

ஆவாக் குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது!

ஆவாக்குழுவைச் சேர்ந்த 11 நபர்களைக் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து ​வேன் உட்பட வாள்களும் பொலிஸா​ரால் மீட்கப்பட்டுள்ளன. வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இன்று அதிகாலை (18) 3 மணியளவில் மானிப்பாய் பிரதேசத்தில் வைத்துக் சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட 11 பேரில் இரண்டு பேர் ஆவா குழுவில் முக்கியஸ்தர்களான போல் விக்டர் மற்றும்...

இணுவில் கிராமத்தை நல்லூருடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மகஜர் கையளிப்பு!

இணுவில் கிராமத்தை நல்லூருடன் இணைக்க வேண்டாமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டதுடன் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. இணுவிலில் இருந்து எங்களை பிரிக்க வேண்டாம் என வலியுறுத்தி ஜே/189 கிராம சேவகர் பிரிவு மக்கள் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்று காலை குறித்த மகஜரைக் கையளித்தனர். இது தொடர்பாக குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத்...

இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஐந்தாவது அமர்வு நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு இந்த உத்தரவை பிறபித்துள்ளார். இதற்கு முன்னர் நடைபெற்ற வட, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் நேற்றைய கூட்டத்தில்...

வவுனியா கல்லுமலை ஆலய வளாகத்தில் விகாரை அமைக்க முயற்சி: பிரதேசத்தில் குழப்பநிலை!

வவுனியா கல்லுமலை ஆலய வளாகத்தில் பௌத்த வழிபாட்டுத் தலம் அமைக்கும் முயற்சியால் அப்பிரதேசத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் கோவிலில் தொல்பொருட் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடு காரணமாகவே கிராம மக்களுக்கும் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்குமிடையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இவ் விடயம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயம்...

எதிர்கட்சி பதவியை விட்டுக்கொடுக்க போவதில்லை: சுமந்திரன்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து நடத்தும் கூட்டாட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பே பிரதான எதிர்கட்சியாக இருக்கும் அதனை யாரும் மறுக்க முடியாது. அதனால் நாம் எதிர்கட்சி பதவியை விட்டுக்கொடுக்க போவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்ற பின்னர்...

கிளிநொச்சியில் பொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உமையாள்புரம் பகுதியில் நேற்று இரவு முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான பிக்கப் வாகனமொன்று வீதியை கடக்க முயன்ற ஒருவரை மோதியதில் குறித்த நபர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த நபரை சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலை அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா...

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய மாட்டேன் – வியாழேந்திரன்

ஐக்கிய தேசிய கட்சியில் சேரும் எண்ணம் தனக்கு எப்போதுமே இல்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சிலர் என்னுடன் நேரடியாக கருத்து கேட்காமல், என்னை அவமானப்படுத்தும் நோக்கிலும், தங்களை...

அரசியல் கைதிகளை விடுவித்தால் சிறையிலுள்ள படையினருக்கும் மன்னிப்பளிக்கவேண்டும் – ஜனாதிபதி

“தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அப்படியெனில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரும் விடுவிக்கப்பட வேண்டும். இதுவே நியாயமானது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பிரதமர் நியமனத்தின் பின்னர் ரணில் விக்ரமசங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களை இன்று நடத்திய சந்திப்பில் ஆற்றிய உரையின் போது ஜனாதிபதி இதனைக் கூறினார். அவரது...

உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர்

உலக உடற்கட்டழகர் மற்றும் உடலமைப்பு விளையாட்டு சம்மேளனத்தின் 10ஆவது உடற்கட்டழகர் போட்டியில் 100 கிலோ கிராமுக்கு மேற்பட்டோர் பிரிவில் தெற்காசியாவின் கறுப்பு சிங்கம் என வர்ணிக்கப்படுகின்ற தேசிய உடற்கட்டழகர் சம்பியனான இலங்கைத் தமிழர் லூசியன் புஷ்பராஜ் வெற்றி பெற்றுள்ளார். தாய்லாந்தில் இடம்பெற்ற 10 ஆவது உடற்கட்டழகர் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டியிலேயே லூசியன் வெற்றி பெற்றுள்ளார்....

முல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது

முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின் கடற்கரையினை பாரிய அலைகள் தாக்கியுள்ளதுடன், பல கரையோரக் கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் நகர்ந்து செல்லும் புயல் காரணமாக முல்லைத்தீவு கடலில் சீற்றம் அதிகரித்து காணப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது....

விசாரணைக்காக முன்னாள் போராளிகளைத் துன்புறுத்துவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும்: சீ.வீ.கே

விசாரணை என்ற பெயரில் முன்னாள் போராளிகளை துன்புறுத்துவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும் என வட.மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தொடர்ந்தும் முன்னாள் போராளிகளை விசாரணை என்ற பெயரில் நான்காம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயற்பாடானது கண்டிக்கத்தக்கது....

போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச தலையீடு அவசியம் : விக்னேஸ்வரன்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் என வட.மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வாரம் ஒரு கேள்வி பதில் பகுதிக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ” போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தை ஏற்கனவே ஜனாதிபதியுடன் சேர்ந்து பலரும் கூறிவிட்டார்கள். ‘எமது படையினர்...

யாழ் கலட்டி பகுதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். கலட்டி சீனியர் ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் மீது இத்தாக்குதல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது சம்பவத்தில் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், இத்தாக்குதல் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும் யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பெற்றோல் குண்டுத் தாக்குதலில் வீட்டின் ஒருபகுதி...

ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கவே ரணிலுக்கு பதவி வழங்கினேன்: ஜனாதிபதி

நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலேயே ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “225 நாடாளுமன்ற உறுப்பினர்களும்...
Loading posts...

All posts loaded

No more posts