Ad Widget

தெற்­கைச் சேர்ந்த 46 பேருக்கு வடக்­கில் ரக­சிய நிய­ம­னங்­கள்!!

கடந்த ஒக்­ரோ­பர் மாதத்­துக்­குப் பின்­னர் வடக்கு மாகா­ணத்­தில் பெரும்­பான்­மை­ இனத்­தைச் சேர்ந்த 46 பேருக்கு இலங்கை மின்­சார சபை­யில் நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

கடந்த ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திகதி நாட்­டில் ஏற்­பட்ட அர­சி­யல் குழப்­பத்­தின் பின்­னர் மகிந்த தலை­மை­யில் அமைச்­ச­ரவை ஒன்று அமைக்­கப்­பட்­டது. அதில் எரி­பொ­ருள் மின்­சக்தி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட சியம்­ப­லாப்­பிட்­டிய இந்த நிய­ம­னங்­களை வழங்­கி­யுள்­ளார் என்று கூறப்­ப­டு­கின்­றது.

கடந்த 50 நாள்­க­ளாக நாட்­டில் அர­சி­யல் குழப்ப நிலமை காணப்­பட்­டது. அந்­தக் காலப்­ப­கு­தி­யில் நிய­ம­னங்­கள் எவை­யும் வழங்­கப்­ப­டக் கூடாது என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ர­விட்­டி­ருந்­தார். அதை­யும் மீறி பெரும்­பான்­மை­யி­னத்­தைச் சேர்ந்த 46 பேருக்கு வடக்கு மாகா­ணத்­தில் நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிய­ம­னங்­க­ளுக்கு விண்­ணப்­பங்கள் கோரப்­ப­ட­வில்லை என்­றும் கூறப்­ப­டு­கின்­றது.இது தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்ததா­வது-:

”மின்­சார சபை­யின் வட­பி­ராந்­திய அலு­வ­ல­கங்­க­ளில் தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்த 46 பேர் நிய­மிக்­கப்­பட் டுள்­ள­னர். இவர்­கள் அனை­வ­ரும் கேகாலை மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்று அறிய முடி­கின்­றது.

இவ்­வா­றான வெற்­றி­டங்­களை எமது மாகாண இளை­ஞர்­க­ளுக்கு வழங்­குங்­கள் என்று நாம் கோரி வரும் நிலை­யில் இர­க­சி­ய­மான முறை­யில் விண்­ணப்­பங்­கள் எவை­யும் கோரப்­ப­டாது இந்த நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அர­சி­யல் குழப்­பம் நில­விய காலத்­தில் வழங்­கப்­பட்ட நிய­ம­னங் களை இரத்­துச் செய்ய வேண்­டும்.

இந்த விட­யம் தொடர்­பில் தலைமை அமைச்­ச­ரின் கவ­னத்­துக்­கும், அபி­வி­ருத்­திச் செய­ல­ணி­யின் கவ­னத்­துக்­கும் கொண்டு செல்­லப்­ப­டும்”.–- என்­றார்.

Related Posts