ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள கட்சிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் அறிவித்தார்.