- Friday
- May 8th, 2026
கடந்த சில வாரங்களாக மன்னார் மண்ணிலே கத்தோலிக்க மதத்தைப் பற்றியும் ஆயர் குருக்களைப் பற்றியும் பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டு வருகின்ற பதிவுகளையிட்டு கவலையடைவதாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக அந்த ஒன்றியம் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...
சர்வதேசமோ வேறு எவருமோ தெரிவிக்கும் வகையில் நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணாகவோ நாட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ எதனையும் செய்வதற்கு தான் தயாராக இல்லையென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு தரப்பினரால் பயன்படுத்தப்பட்ட காணிகள் அவற்றின் உரிமையாளர்களுக்கு மீண்டும் விடுவிக்கப்படவில்லை என்றும், அது தொடர்பில் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட...
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வட. மாகாண தொழில்நுட்பவியல் சேவை உத்தியோகத்தர்கள் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இப்போராட்டம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கவனயீர்ப்பு பேரணியொன்றிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் ஒன்றுதிரண்ட தொழில்நுட்பவியல் உத்தியோகத்தர்கள், தமது சேவைக்கான தனியான சேவைப் பிரமாணக் குறிப்பை அரசு நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்...
யாழ்.மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்களில் நால்வர் நியமனம் கிடைக்கப்பெற்று ஒரு மாத காலம் ஆகின்ற நிலையில் இன்னமும் தமது கடமைகளை பொறுப்பேற்க வில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினரை கேட்ட போது , வைத்தியர்கள் கடமையை பொறுப்பேற்காதது தொடர்பில் மாகாண மற்றும் மத்திய சுகாதார அமைச்சுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம் என...
எமக்கு வீதியும் வேண்டாம் அபிவிருத்தியும் வேண்டாம் குடிக்க குடிக்க குடிநீர் வழங்குங்கள் என காரைநகர் மக்கள் கேட்டுள்ளனர். யாழில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெப்ப நிலை காரணமாக வரட்சி காரணமாக தீவக பகுதிகளில் கடுமையான வரட்சி நிலவி வருகின்றது. நீர் நிலைகளில் நீர் வற்றியுள்ளன. காரைநகர் பகுதிகளில் குடிநீரை பெறுவதற்கு மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி...
பாமர மக்களை கடவுளாக மதிப்பவன் என்ற வகையில் கிளிநொச்சியில் சுகாதாரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டமைக்கு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். வடக்கு ஆளுநரின் மக்கள் சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்றது. இதன்போது, கொள்வனவு செய்யப்பட்ட மதிய உணவில் புழு காணப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கை...
ஓமானில் புலம்பெயர்ந்துள்ள தம்பதியின் நிதியுதவியில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடு நேற்று பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தொல்புரம் மூட்டடியில் புற்றுநோயால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு சுமார் 10 லட்சம் ரூபா நிதியில் இந்த வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி தர்ஷன ஹெட்டியராச்சி மற்றும் நன்கொடையாளரான ஓமானைச் சேர்ந்த மோகன் சங்கர் தம்பதி இணைந்து வீட்டைப்...
அடுத்து வரும் 3 மாதங்களுக்கு சகல மின்பாவனையாளர்களும் தமது வீடுகளில் 2 மின்குமிழ்களை அணைப்பதுடன், அரச – பொது நிறுவனங்களில் மின்பாவனையை 10 சதவீதத்தால் குறைக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க மின்சக்தி அமைச்சுக்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையைக் கருத்திற்கொண்டு, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த...
சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய இளைஞனை காணவில்லை என தந்தை முறைப்பாடு செய்துள்ளார். யாழ்.சுழிபுரம் கிழக்கை சேர்ந்த மனோரஞ்சன் சஜிந்தன் (சயந்தன்) எனும் இளைஞனே காணமற்போயுள்ளார். குறித்த இளைஞன் மறவன்புலவு பகுதியில் தற்காலிகமாக தங்கி இருந்து உணவகத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். அந்தவகையில், கடந்த 19ஆம் திகதி வேலைக்கு சென்றவர் இதுவரை...
அரசாங்கம் ஏமாற்றுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவார்களாயின் அந்த அரசிற்கான ஆதரவை ஏன் தொடர்ந்தும் வழங்க வேண்டுமென முன்னாள் வட.மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன் அரசாங்கத்துக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக்கொள்ள கூட்டமைப்பினர் தயாராக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
வடக்கில் நிலவும் வைத்தியசாலைகளுக்கான வெற்றிடங்களில் தகுதியான உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் சுகாதாரம், போசனை, சுதேச வைத்திய அமைச்சு, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில்...
மண்ணின் எல்லைகளைக் காப்பாற்றப் போராடிய மறவர்களை விடுதலைப் போராளிகள் என்று கொண்டாடுகின்றோம். அதேபோன்றுதான் மண்ணின் வளங்களைக் காப்பாற்றுகின்ற மாணவர்களும் போற்றப்படவேண்டியவர்கள். இவர்கள் விடுதலைப் போராளிகளுக்கு நிகரான பசுமைக் காவலர்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். சிறுப்பிட்டி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வரும் 27ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இடம்பெறுவதோடு இவ்விடயம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பும் நடத்தப்படவுள்ளது. பொது நிர்வாக சுற்று நிருபங்களை பாரபட்சமாக நடைமுறைப்படுத்துதல், ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுக்கு நியாயமற்ற நிபந்தனைகள் விதிப்பு, ஊழியர்கள் மீதான அச்சுறுத்தல்கள் உட்பட பல்வேறு...
வட மாகாணத்தில் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றும் 491 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஆசிரியர் சேவை வகுப்பு 03 இன் இரண்டாம் தரத்திற்கு இவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, வட மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மூன்று வருடங்களுக்கு மேல் தொண்டர் ஆசிரியராகப் பணியாற்றியவர்களுக்கே நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு...
யாழ்.குடாநாட்டின் நீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்கு வடமராட்சி களப்பில் இருந்து நீரை எடுப்பதற்கான பாரிய திட்டம் மிக விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகன் தெரிவித்துள்ளார். இது யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி எனவும் அவர் கூறியுள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே ஆளுநர்...
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. குறிப்பாக வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, அநுராதபுரம், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (புதன்கிழமை) அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என அத்திணைக்களம் எச்சரித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்...
யுத்த குற்றச்சாட்டு தொடர்பாக சாட்சிகளோடு சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்படுமாயின் தரம் பார்க்காது இராணுவத்தினர் தண்டிக்கப்படுவார்களென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. எதை...
ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் ஆனது, இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற் கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ...
இறுதி யுத்தத்தில் பொதுமக்களை இலக்கு வைத்து அரசாங்கம் தாக்குதல் நடாத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது தொடர்ந்தும்...
கொழும்புத்துறையில் யாழ் மாநகரசபை முதல்வரின் ஒத்துளைப்போடு தனியார் சிலரால் மூடப்பட்ட வீதியை மீண்டும் திறக்கக்கோரி போராடிவரும் மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சந்தித்து கலந்துரையாடியபோது அதனை அறிந்து அங்கு வந்து குழப்பத்தில் ஈடுபட்ட குறித்த பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த யாழ் மாநகர சபை உறுப்பினரும் துணை முதல்வருமான...
Loading posts...
All posts loaded
No more posts
