சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய இளைஞனை காணவில்லை என தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்.சுழிபுரம் கிழக்கை சேர்ந்த மனோரஞ்சன் சஜிந்தன் (சயந்தன்) எனும் இளைஞனே காணமற்போயுள்ளார்.
குறித்த இளைஞன் மறவன்புலவு பகுதியில் தற்காலிகமாக தங்கி இருந்து உணவகத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
அந்தவகையில், கடந்த 19ஆம் திகதி வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என தந்தையார் தெரிவித்தார்.