பிரதமர் – ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் பின்னரே இறுதி தீர்மானம் -த.தே.கூ

வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு நாளைய தினம் பிரதமருடனும் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தீர்மானிக்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார். அத்துடன் எமக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் உறுதியான நகர்வுகளை கையாளாவிட்டால் கூட்டமைப்பின் தீர்மானமும் காத்திரமானதாக இருக்கும் எனவும்...

கீரிமலையில் வாளுடன் நடமாடிய இளைஞர் கைது!

கீரிமலை பிரதேசத்தில் வாளுடன் நடமாடிய குற்றசாட்டில் இளைஞரொருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொல்லன்கலட்டி பகுதியை சேர்த்த 27 வயதுடைய இளைஞனையே பொலிஸார் கைது செய்துள்ளனர். கீரிமலை பிரதான வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில், இளைஞரொருவர் வாளுடன் நடமாடுவதாக அப்பகுதி மக்கள், காங்கேசன்துறை பொலிஸாருக்கு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தகவல் வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு...
Ad Widget

அரசுக்கு எதிராக கூட்டமைப்பை வாக்களிக்குமாறு அருந்தவபாலன் சவால்!

எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவிருக்கும் வரவு-செலவு திட்ட வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்து தமிழ் மக்களுக்கு ஆதரவாக முடிந்தால் கூட்டமைப்பை செயற்படுமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைபரப்பு செயலாளர் அருந்தவபாலன் சவால் விடுத்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (ஞாயிறுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இம்முறை நடைபெற்ற மனித உரிமைகள் சபையில்...

சர்வதேச விசாரணை பொறிமுறையின் அவசியத்தை காட்டவே இந்தியா உதாரணம் – விக்கி

சர்வதேச விசாரணை பொறிமுறையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதற்கே இந்தியாவை உதாரணம் காட்டியுள்ளதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். தமிழ் மக்களை இனப்படுகொலைக்கு உட்படுத்தி நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கை இராணுவத்தை காப்பாற்றும் வகையில் மனித உரிமைகள் சபையில் கூட்டமைப்பு செயற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்...

மரண தண்டனையை நடைமுறைப்படுத்த முடிவு – ஜனாதிபதி

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதன்படி போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான திகதி குறிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு மோதர பகுதியில் சர்வ மத தலைவர்களுடனநேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் அங்கு...

பொலிஸ் தடுப்பிலிருந்த இளைஞன் தற்கொலை முயற்சி!!!

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் பிளேட்டால் தனது கழுத்தை கீறி தற்கொலைக்கு முற்சித்துள்ளார். அந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த மாதம் வீடொன்றுக்குள் புகுந்து தீவைத்தனர் – அடாவடியில் ஈடுபட்டனர்...

வறட்சியான காலநிலை தொடரும் – வளிமண்டல திணைக்களம் !

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை மேலும் சில நாட்களுக்கு தொடர கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதனால் நாட்டின் 6 மாவட்டங்களில் தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன் இதுவரையில் 15 ஆயிரத்து 803 குடும்பங்களை சேர்ந்த 56 ஆயிரத்து 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, மின்னுற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் எதிர்வரும் மே...

சுமந்திரனுக்கு கெடு காலம் ஆரம்பம்… ஜெனிவா போனது ஏன் தெரியுமா?: தமிழ் தேசிய மக்கள் முன்னணி

“சுமந்திரனுக்கு கெடு காலம் ஆரம்பித்திருக்கிறது. தெற்கிலும் அவரை எதிர்க்கும் நிலைமை உருவாகியிருக்கிறது. சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவமோகன், சம்பந்தன் உட்பட கூட்டமைப்பில் எவர் பேசுவதாக இருந்தாலும் தேர்தலை மையப்படுத்தியே எல்லாம் பேச்சும் நடக்கிறது. சிறிதரன் உட்பட அனைவரம் இன்றைக்கு தமது அரச விசுவாசத்தைக் காட்ட முனைந்து இருக்கின்றார்கள்.“ இவ்வாறு கூறியிருக்கிறார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

2 மாதங்களுக்குள் அரச சேவைக்கு 20 ஆயிரம் பட்டதாரிகள் புதிதாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் – பிரதமர் தெரிவிப்பு

அரச சேவைக்கு 20 ஆயிரம் பட்டதாரிகள் புதிதாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். “இரண்டு மாதங்களுக்குள் 20 ஆயிரம் பட்டதாரிகள் அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். எதிர்கால உலகிற்கு ஏற்ற வகையில் பட்டதாரிகளுக்கு தமது வல்லமையை மேம்படுத்திக் கொள்வது அவசியமாகும். பட்டதாரிகளிடமிருந்து தேவையான சேவை கிடைக்காமை பெரும் பிரச்சினையாகும்” என்றும் பிரதமர்...

ஆளுநருக்கு அழைப்பாணை!

கிளிநொச்சி நகரிலுள்ள பிரபல உணவகம் தொடர்பிலான வழங்கில் எதிர்வரும் 5ம் திகதி முன்னிலையாகுமாறு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு கிளிநொச்சி நீதவான் எம்.கணேசராஜா நேற்று 29.03.2019 வெள்ளிக்கிழமை அறிவித்தல் வழங்க உத்தரவிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த உணவகத்திலிருந்து கிளிநொச்சி செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிற்கு வழங்கப்பட்ட மதிய உணவில் சிறிய புழு ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட...

அதிக வெப்பம் காரணமாக வயோதிபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் அதிக வெப்பம் காரணமாக வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தல்லையப்புலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வயோதிபர் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்.தல்லையப்புலம், கரவெட்டியைச் சேர்ந்த கார்த்திகேசு இராசதுரை என்ற 67 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்தார். நேற்று பிற்பகல் உறவினர் வீடு ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் மோட்டார்...

யாழில் 1500 இற்கும் அதிகமானோர் டெங்கு நோயால் பாதிப்பு!

ந்த வருடத்தின் முதல் மூன்று மாதக்காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலும், அதற்கு அடுத்தததாக யாழ் மாவட்டத்திலுமே இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு மாநகர சபைக்கு...

இலங்கையின் செயற்பாடுகள் குறித்து உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து உறுப்பு நாடுகள் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு...

புத்தாண்டில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாது – அரசாங்கம்

தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பு கொண்டாடப்படும் காலத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு மற்றும் மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம்நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இந்த...

வடக்கு – கிழக்கில் சித்தியடைந்தோர் வீதம் குறைவு!! வேம்படி பெறுபேறுகளில் முதலிடத்தில்

2018ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்றவர்களில் முதல் பத்து இடங்களுக்குள் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த எந்தவொரு மாணவரும் இடம்பிடிக்கவில்லை. அத்துடன், வடக்கு கிழக்கில் மாணவர்களின் சித்தி வீதமும் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 ஆயிரத்து 495 பேர் பரீட்சைக்குத் தோற்றி 6...

போலி நிதி நிறுவனத்தை நடாத்தி மக்களின் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்!!

கொடிகாமம் பகுதியில் உள்ள மக்கள் வங்கிக்கு முன்பாக W.S.D (work shop development) என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் மக்களுடைய வீ டுகளுக்குள சென்று சேகாிப்பு திட்டம் என்ப பெயாில் மோசடி வேலையை ஆரம்பித்திருந்தது. இதற்காக அந்த பகுதியை சோ்ந்த சில வறிய குடும்பங்களை சோ்ந்த பெண்களை 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் என...

லைக்காவின் நன்கொடையில் யாழ்.பல்கலைக்கு நவீன கட்டிடத் தொகுதி: அமைச்சரவை அனுமதி

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நன்கொடையாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு நவீன கட்டிடத்தை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்கான உடன்படிக்கையை மேற்கொள்வதற்கும் நகர திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் ஊடாக 740...

நுண்கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் குடும்பப் பெண் தற்கொலை

நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுக்கொண்டு அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் அதிக மாத்திரை வில்லைகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வவுனியா வேப்பங்குளத்தில் இடம்பெற்றுள்ளதுடன் அவரின் இறுதிக் கிரியைகள் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. வவுனியா வேப்பங்குளம் பகுதியில் கடந்த 5ஆம் திகதி நுண்கடன் நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகையைச் செலுத்த முடியாத...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு – 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அனைத்து பாடங்களிலும் A சித்தி!

2018ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தால் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன. இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 ஆயிரத்து 413 பேர் ஒன்பது பாடங்களிலும் A சித்திகளை பெற்றுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். எனினும்...

கத்தோலிக்க மதம் குறித்து வெளியாகும் பதிவுகள்- மறைமாவட்ட ஆசிரியர் ஒன்றியம் கவலை

கடந்த சில வாரங்களாக மன்னார் மண்ணிலே கத்தோலிக்க மதத்தைப் பற்றியும் ஆயர் குருக்களைப் பற்றியும் பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டு வருகின்ற பதிவுகளையிட்டு கவலையடைவதாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக அந்த ஒன்றியம் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...
Loading posts...

All posts loaded

No more posts