- Tuesday
- May 5th, 2026
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை அனைவரும் எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்த வேண்டும். எவரும் தேர்தலை புறக்கணிக்கக்கூடாது என்று நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அவர்மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தேர்தலில் வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையாகும். அந்தக் கடமையையும் பொறுப்பையும் ஒவ்வொருவரும்...
இன்று (13.11.2019) புதன்கிழமை நடந்த சம்பவம் என்னை ஆத்திரம் கொள்ள வைத்தது. இன்று நேற்றல்ல பலநாட்களாக பிரயாணத்தின்போது நடக்கின்ற நிகழ்வுகள்! ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தவர்கள் என்றால் - மற்றவர்களுக்காக பரிவு காட்டும் ஒரு சமூகம் என்று பலராலும் கொண்டாடிய சமூகம் இன்று ஏனோ சுயநலமுடையதாக மாறிவிட்டது. பகிர்ந்து விட்டுக்கொடுத்து பெரியவர்களை கனம் பண்ணிய எமக்கு இதைப்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்த தம்பிராசா பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்ட நிலையில் இரவு 10 மணியளவில் விடுவிக்கப்பட்டார். “ஜனாதிபதி தேர்தல் தபால்மூல வாக்களிப்பின் போது, ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள தபால்மூல...
வடமாகாண மக்களுக்கு போக்குவரத்தில் உலகதர சேவையை வழங்கலே எனது கனவாகும் என்று தனியார் பஸ் துறையில் புரட்சிகர வலையமைப்பு சேவையின் அறிமுக நிகழ்வில் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். வரையறுக்கப்பட்ட யாழ் தூர சேவை பஸ் உரிமையாளர்களின் நிறுவன அனுசரணையுடன் ஆளுநர் செயலகத்தில் நேற்று (14) இடம்பெற்ற இந்த அறிமுக நிகழ்வில் பஸ்...
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் ஆர்பாட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் தமது நாட்டு பிரஜைகளை அவதானமாக இருக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் விடுக்கப்பட்ட 2ஆவது நிலை பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. பெரிய கூட்டங்கள் அல்லது...
ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு – டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, ரோயல் கல்லூரி கம்பாஹா – பத்தலகேதர் வித்யலோகா மகா வித்யாலயம் களுத்துறை வடக்கு – முசாயஸ் கல்லூரி கண்டி – மொடல் பாடசாலை மாத்தறை...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களை ஒலிபரப்ப முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்மன் கோயில் வீதியில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கூட்டமைப்பின் இறுதி பிரசார கூட்டம் இன்று (புதன்கிழமை)...
யாழ்ப்பாணம் பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையில் பாதுகாப்பான ரயில் கடவை அமைக்கக் கோரி, பொது மக்கள் ரயில் பாதையை மறித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அந்த பாதுகாப்புக் கடவையில் இன்று (நவ.13) புதன்கிழமை காலை 9 மணிக்கு தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். அதனையடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் அந்தப் பகுதி...
நேரகாலத்துடன் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று உங்கள் வாக்குக்களை போடுங்கள் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தேர்தலில் வாக்களிப்பது ஒரு ஜனநாயக உரிமை. இந்த உரிமையை மக்கள் அனைவரும் எவரின் கட்டாயமுமின்றி தெளிந்த மனதுடனும் தீர்க்கமான முடிவுடனும் பயன்படுத்த வேண்டும்....
தமிழ் பேசும் வேட்பாளருக்கு வாக்களிப்பது அல்லது தேர்தலை புறக்கணிப்பது மறைமுகமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதற்கு சமமாகுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அம்பாறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், “ஸ்ரீலங்கா பொதுஜன...
யாழ்ப்பாணம் – நாவலர் வீதி ரயில் கடவையின் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்று ஒரு பிள்ளையின் தந்தையே விபத்தில் உயிரிழந்தார். காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த...
கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காணப்படும் தூசுப் படிமங்களின் செரிவு அதிகரிக்கக்கூடும் என தேசிய கட்டிட ஆய்வு நிபுணர் தெரிவித்துள்ளார். கொழும்பு நகரின் வளி தரக்குறியீடு தற்போது 107ஆக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த இந்நிலமை இன்று மேலும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் கொழும்பு நகரின் தூசு படிமங்களின் செரிவு...
கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றால் இனிவரும் காலங்களில் தேர்தலே இடம் பெறாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நேற்று (12) சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதன் நோக்கம் பற்றி மக்களை தெளிவுபடுத்தும் கூட்டம் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் ராஜபக்ச குடும்பத்தில் மிகவும்...
தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கவே கடந்த காலங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன, அந்த உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக கோட்டாபய ராஜபக்ஷவிடம் மண்டியிட்டு பிச்சை எடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை கலாசார மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்தை பாதிக்காமல் செயற்பட கூடிய ஒருவரை...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். திருகோணமலை கலாசார மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களின் இணைப்பிரச்சினைக்கான தேர்வை பெற்றுக்கொள்ள அனைத்து தரப்பினருடனும் பேசியதாக கூறினார். ஆனால்...
தமிழர்களுக்கான அநீதி இரண்டு அணிகள் சார்ந்தவர்களாலும் இழைக்கப்பட்டிருப்பதாக ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரித்து யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு எதிரான அநியாயங்கள் எப்போதோ ஆரம்பமாகிவிட்டதாக தெரிவித்தார். இதன் விளைவாகத்தான்...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று 11 (திங்கட்கிழமை) முதல் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து Alliance விமானம் 9I 101 முற்பகல் 10.35 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் மதியம் 12.16 தரையிறங்கியது. இந்த விமானத்தில் 13 பயணிகள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர்....
கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் இளம் குடும்பப் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 10 மாதக் கைக்குழந்தை உள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் 2ஆம் வாய்க்காலில் இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவத்தில் அன்ரன் ஜெயராஜ் மேரி அகிலா ( வயது -29) என்பவரே கொல்லப்பட்டார்....
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நீண்ட நாட்களின் பின்னர் விஜயம் மேற்கொள்ளும் அவர், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறும் மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார். பின்னர் தெல்லிப்பழை, சங்கானை போன்ற இடங்களுக்கும் செல்லவுள்ளதுடன் அப்பகுதி மக்களுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணத்தில் மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டதன் பின்னர் அவர்,...
வவுனியா- குறிசுட்டகுளம் பகுதியில் காணாமல்போயிருந்த பல்கலைக்கழக மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறிசுட்டகுளம் காட்டிற்குள், மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து குறித்த இளைஞனை பொலிஸார் சடலமாக இன்று (திங்கட்கிழமை) கண்டெடுத்துள்ளனர். காட்டிலுள்ள கிரவல் வெட்டப்பட்ட கிடங்குக்குள் தண்ணீர் தேங்கிய பகுதிக்குள் வீழ்ந்து இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் நீதவானின் வருகையின் பின்னர்...
Loading posts...
All posts loaded
No more posts
