யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரண்டு வாள்களை யாழ்ப்பாணம் பொலிஸார் மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன எனக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் குறித்த வீட்டை இன்று அதிகாலை சோதனையிட்டனர்.
இதன்போது வீட்டின் முன் முகப்புக் பகுதியிலிருந்து இரண்டு கூரிய வாள்கள் மீட்கப்பட்டுள்ளன என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.