Ad Widget

பருத்தித்துறையில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது!

உள்நாட்டுத் தயாரிப்பு குண்டுகளுக்கு பயன்படுத்தும் வெடிமருந்தை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பூநகரியைச் சேர்ந்த நால்வர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை, வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையில் வைத்து குறித்த நால்வரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான நால்வரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் யாழ். அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரும் முன்னெடுத்த தேடுதலில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து சி4 வெடிமருந்தின் வீரியத்துக்கும் குறைந்தளவான 856 கிராம் வெடிமருந்து கைப்பற்றப்பட்டது. அத்துடன், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.

Related Posts