306 சிறைக்கைதிகள் நாளை விடுதலை : தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை என்கிறது அரசாங்கம்

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது பண்ணிப்பிற்கு அமைய 306 கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எனினும் தமிழ் அரசியல் கைதிகள் எவரையும் விடுவிக்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். வெசாக் தினமான நாளை கைதிகள் விடுதலையாகவுள்ள நிலையில்...

வடக்கில் சலூன்களுக்கான சுகாதார நடைமுறை அறிவுறுத்தல்கள்!!

வடக்கு மாகாணத்தில் சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்குரிய அறிவுறுத்தல்களை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நீண்டநாள்களளாக ஊரடங்கு மற்றும் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மூடப்பட்டு இருந்து தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும்....
Ad Widget

ஊரடங்கு இரவு 8 மணிக்கு மீள நடைமுறைக்கு வருகிறது – சிறப்பு பொலிஸ் நடவடிக்கை இன்று இரவு ஆரம்பம்

நாடுமுழுவதும் இன்று இரவு 8 மணி முதல் நடைமுறைக்கு வரும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் மே 11ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்று கோவிட் -19 நோய் பரவரைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களைக் கைது செய்ய இன்று...

சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியவர்களில் 4 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு!

யாழ்ப்பாணம், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 4 பேரும் முழுமையான பரிசோதனைகளின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த முதலாம் திகதி நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில் அவர்களுக்குத்...

பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளைப் பரப்ப சிலர் முயற்சி- வைத்தியர் சத்தியமூர்த்தி

பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளை பரப்ப சிலர் முயற்சி செய்யலாம் எனவும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இரு நாட்கள் பரிசோதனைகள் இடம்பெறாமைக்குக் காரணம் ஆய்வுகூடத்தில் சில சரிப்படுத்தல்களை செய்ய வேண்டிய தேவைகள் இருந்தன எனவும் அவர்...

உடுவில் பகுதியில் வயோதிபத் தம்பதியை தாக்கி துணிகரக்கொள்ளை – வயோதிபர் படுகாயம்!

உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 தங்கப் பவுண் நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy...

யாழ். தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த பெண் உயிரிழப்பு!

தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் கெற்பேலி தனிமைப்டுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பண்டாரநாயக்கா மாவத்தையினைச் சேர்ந்த பாத்திமா அன்சி மொஹமட் சுல்தான் என்ற 78 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். கொரோனோ தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் கொழும்பிலிருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் கொடிகாமம் கெற்பலி...

யாழில் முதியவருக்கு இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்து கையளிக்கப்பட்டது!!

கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியில் முதியவருக்கு இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்து கையளிக்கப்பட்டது. ஜே/263 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் வயோதிப் பெண் தனது பேரப்பிள்ளையுடன் வசித்து வருகின்றார். அவருக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு கோப்பாய் பிரதேச செயலகத்தால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த விடயம் இராணுவத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து...

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்!!

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சமீபத்திய கோவிட் 19 நிலைமை அறிக்கையின்படி கடந்த 24 மணி நேரத்தில் 37 நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டனர். அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலோர் அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டபோது அறிகுறி தென்படாதவர்கள் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் தற்போது மொத்தமாக அடையாளம் காணப்பட்டுள்ள 755 பேரில் 550 பேர் தொடர்ந்தும்...

சுகாதார கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு சலூன்களைத் திறக்க அனுமதி

சுகாதார கட்டுப்பாடுகளைப் பின்பற்றி சிகை அலங்கரிப்பு நிலையங்கள், அழகு நிலையங்களை மீளத் திறக்க சுகாதார அமைச்சர் அனுமதியளித்துள்ளார். சுகாதார துறையினரால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை உரிய வகையில் பின்பற்றப்படவேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனையின் படி, முடி வெட்டுதல் உள்ளிட்ட மிக அத்தியாவசிய சேவைகளை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர்...

ஜூன் முதலாம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என வெளியாகி செய்தி உண்மையில்லை – கல்வி அமைச்சு

ஜூன் முதலாம் திகதி முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. “ஜூன் 1 முதலாம் திகதி தொடக்கம் பல கட்டங்களில் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மே 11ஆம் திகதி முதல் பணிக்கு அறிக்கையிடவேண்டும். க.பொ.த. உயர்தரம் மற்றும் சாதாரண நிலை மாணவர்களுக்காக பாடசாலைகள்...

இன்று உயிரிழந்த பெண் ஒரு மாதமாக நோய்வாய்ப்பட்டு வீட்டிலிருந்துள்ளார்!

கோவிட் -19 நோயால் இன்று உயிரிழந்த பெண், சுமார் ஒரு மாதமாக நோய்வாய்ப்பட்டு வீட்டிலிருந்துள்ளார் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் 9ஆவது உயிரிழப்பு இன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் மோதரை வசிக்கும் 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இலங்கையில் கோரோனா...

யாழ்.சிறையில் உயிர்மாய்க்க முயன்ற சந்தேக நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் தப்பிஓட்டம்!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிரை மாய்க்க முயற்சித்த போதைப்பொருள் சந்தேக நபர் ஒருவர் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்துள்ளார். அவர் வைத்தியசாலைக்கு அண்மையாக உள்ள கூலர் நிறுவனம் ஒன்றில் தரித்து நின்ற படிரக வாகனம் ஒன்றை எடுத்துத் தப்பிச் சென்றதுடன், அந்த வாகனத்தை கல்வியங்காடு பகுதியில் கைவிட்டு தப்பித்துள்ளார். எனினும் சந்தேக நபர் யாழ்ப்பாணம்...

கொரோனா குறித்து தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் விசேட வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை!

கொவிட் -19 தொற்றுநோய் பரவல் குறித்த அச்சுறுத்தல் நீங்கவில்லை எனத் தெரிவித்துள்ள தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர, எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியா உள்ளோம் என்றும் கூறியுள்ளார். அத்துடன் தொடர்ந்தும் மக்கள் தமது சுய பாதுகாப்புகளை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் சமூக பரவல் குறித்த அச்சம் குறைந்துள்ளது. எவ்வாறு இருப்பினும் பரிசோதனைகளை...

தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த வாரம் முதல் அமுல் – பொலிஸ்

ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடமபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி...

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை இன்று ஆரம்பம்!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதன்படி இன்று (திங்கட்கிழமை) வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேர் மற்றும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 9 பேருக்கு வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது....

8ஆவது கோரோனா நோயாளி உயிரிழப்பு!!

நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 8ஆவது நபரும் இன்று உயிரிழந்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குருநாகல், பொல்பித்திகமவைச் சேர்ந்த 72 வயதான பெண், ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

பிரதமர் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்த, கலைக்கப்பட்ட நாடாளுமன்றின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. COVID -19 அனர்த்த நிலைமை தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்துவதற்காகவும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்காகவும், பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.PMO Tamil news...

குடிபோதையில் கல்வெட்டுக்களை சேதப்படுத்திய ஐவர் கைது!!

நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் நினைவு கல்வெட்டுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது என தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, கும்பல் ஒன்று இடுகாட்டில் வைத்து கள்ளு குடித்துவிட்டு கல்வெட்டுகளை...

14 வயதுச் சிறுமி வன்புணர்வு; உறவுமுறை இளைஞர்கள் இருவர் கைது!!

பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் அவரது சகோதரனும் மாமன் உறவு இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் உரும்பிராயில் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்கள் இருவரும் இன்று கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். “14 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தியமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்தது. அதுதொடர்பில் சிறுமியால் வழங்கப்பட்ட தகவலின்...
Loading posts...

All posts loaded

No more posts