Ad Widget

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் வெளியீடு!

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.

இதேநேரம், தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் அந்த அமைச்சினால் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் நியமனம் பெறுபவர்கள் செப்டெம்பர் 02ஆம் திகதி தமக்கு அருகில் உள்ள பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 50,000 தொழில் வாய்ப்புக்கள் தொழிலற்ற பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதோடு, 100,000 தொழில் வாய்ப்புகளுக்காக பொருத்தமானவர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறைந்த வருமானம் கொண்டவர்கள் 100,000 பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்குவதற்காக பல்துறை அபிவிருத்தி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் 150,000 பேருக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தமையால் இவ்வேலைத்திட்டம் இடை நிறுத்தப்பட்டது.

எனினும் தற்போது தேர்தல் நிறைவடைந்துள்ளதால் இந்த திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெயர் பட்டலைப்பார்வையீடுவதற்கு

Related Posts