Ad Widget

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டம் கொழும்பில் – பதவிநிலைகளில் மாற்றம்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டம் எதிர்வரும் 20ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவிநிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புதிய பேச்சாளர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பான தீர்மானம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய செயற்குழு நேற்று கூடியவேளையில் நிறைவேற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்ததீர்மானம் எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு வலியுறுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு வீதம் சரிவு, தேசியப்பட்டியல் விவகாரம் என கூட்டமைப்புக்குள் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், பொதுத்தேர்தல் இடம்பெற்ற பின்னர் இடம்பெறவுள்ள முதலாவது நாடாளுமன்றக் கூட்டம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts