மிருசுவில் கொலை; சகோதரர்கள் மூவர் கைது!!

தென்மராட்சி மிருசுவில்-மன்னன் குறிச்சிப்பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் சகோதரர்கள் எனவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ராஜகோன் சிவகுமார் (வயது-40)...

மதுபோதையில் ஆவணங்களுமின்றி வாகனம் செலுத்தியவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம்!!

மோட்டார் சைக்கிளின் ஆவணங்களின் மதுபோதையில் செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் மாநகரில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் வாகனத்தைச் செலுத்திச் சென்ற போது, வாகன வரி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம்...
Ad Widget

அடையாள அட்டை இறுதி இலக்கப் பொறிமுறை ஊரடங்கு உள்ள இடங்களில் மட்டும் நடைமுறை – தளர்த்தப்படும் இடங்களுக்குப் பொருந்தாது

ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் மட்டுமே தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோருக்கு அனுமதியளிக்கப்படும். ஊரடங்கு தளர்த்தப்படும் இடங்களில் எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லை” இவ்வாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மக்களின் தேவையற்ற ஒன்றுகூடலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் போது மட்டுமே...

வெளிநாடுகளில் அங்கத்தவர்கள் உள்ளோர், தனியார் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கும் 5,000 ரூபாய் உதவிக் கொடுப்பனவு!!

தொழில்களுக்காக வெளிநாடு சென்றுள்ளவர்கள் உள்ள குடும்பங்கள், ஆடைத் துறை உள்ளிட்ட தனியார் துறைகளில் பணியாற்றும் நபர்கள் உள்ள குடும்பங்கள் மற்றும் தோட்டத்துறை தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கு இடர்கால உதவித் தொகையான 5 ஆயிரம் ரூபாயை வழங்குமாறு பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சகல மாவட்டச் செயலாளர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் பிரதமர் அலுவலக மேலதிக செயலாளர்...

மிருசுவிலில் உறவினர்களுக்கு இடையே மோதல்!! ஒருவர் சாவு! இருவர் படுகாயம்!!

மிருசுவில் கரம்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்றிரவு 7.30 மணியளவில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்....

யாழ் இந்து 96 பிரிவின் உலர் உணவு விநியோக நடவடிக்கை – இரண்டாம் கட்டம்

இலங்கையில் மட்டுல்லாது உலகளாவிய ரீதியில் தற்போது நிலவி வருகின்ற அசாதாரண சூழல் காரணமாக பெருந்தொகையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையிலுள்ள எமது உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 96 ஆம் ஆண்டு அணி மாணவர்கள் முன்னெடுத்த உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் இன்று முற்றுப்பெற்றுள்ளன. கோறளைப்பற்று வடக்கு, வாகரை...

உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது குறித்து இரண்டு வகைத் திட்டங்கள் பரிசீலனை- பிரதமர் மஹிந்த

உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக இரண்டு வகையான திட்டங்களை பரிசீலித்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுனிசெஃப் நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறுவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போதே பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாடசாலைகளை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். பாடசாலைகள் திறக்கப்படும் போது முதலாம்...

காணாமல்போயிருந்த மாணவன் சடலமாகக் கண்டெடுப்பு- கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி, பளைப் பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன், ஆனையிறவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது, பளைப் பகுதியைச் சேர்ந்த மாணவன் நான்கு நாட்களாகக் காணவில்லை என பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது....

யாழ். மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடி; ஆவா குழுவை வைத்து செய்விப்பேன் எனவும் மிரட்டல்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈபிடிபி உறுப்பினர் இரா. செல்வவடிவேல், தனது மகனுடன் சென்று வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வீட்டிலுள்ள கோழிப்பண்ணையை அகற்றாவிடின் ஆவா குழுவைக் கொண்டு அழிக்க வேண்டி வரும் என எச்சரித்துள்ள மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல், பண்ணை உரிமையாளரைத் தாக்கியும் உள்ளார். இந்தச் சம்பவம்...

இலங்கையில் குணமடைந்த கொரோனா தொற்றாளருக்கு மீளவும் தொற்று – இதுவரை 700 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பூரண குணமடைந்ததாக வீட்டுக்கு அனுப்பப்பட்ட நபர் ஒருவர் மீள அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்ட சம்பவம் ஜா - எல பகுதியில் பதிவாகியுள்ளது. 67 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொரோனாவால் மீளவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜா எல நகர சபையின் பிரதான...

இலங்கை மத்திய வங்கி கொவிட் – 19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள், தனிநபர்களின் வசதிக்காக முடிவுத் திகதி நீடிப்பு

இலங்கை மத்திய வங்கி கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களின் வசதிக்காக முடிவுத் திகதியை நீடித்துள்ளது. கொவிட் - 19 பரம்பலினால் நிதி நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதில் பாதிக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களினால் எதிர்கொள்ளப்படும் கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கி கடன் பிற்போடுதல் மற்றும் இரண்டு மாத தொழிற்படு மூலதனத்திற்காக...

குடத்தனையில் மணல் கடத்தல் விவகாரம்; 4 பெணளுக்கும் பிணை!!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலில் அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பெண்களையும் பிணையில் விடுவித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. “மணல் கடத்தல் கும்பல்களை நாம் ஆதரிக்க முடியாது. அவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் எந்தக் குற்றமும்...

பருப்பு, ரின் மீன் ஆகியவற்றின் அதிகூடிய சில்லறை விலை நீக்கம்!!

மைசூர் பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றின் அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம் நீக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. ஏப்ரல் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் சாந்தா திசானநாயக்க கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய மைசூர்...

அல்லைப்பிட்டியில் பற்றைக்கு விசமிகளால் தீவைப்பு!!

யாழ்ப்பாணம் தீவகம் – அல்லப்பிட்டிப் பகுதியில் பாடசாலைக்கு அருகிலுள்ள பற்றைக் காணியில் விசமிகளால் மூட்டப்பட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணம் மாநகர தீயணைப்பு பிரிவு மற்றும் அப்பகுதி பொது மக்கள் இணைந்து தீயினை அணைத்துள்ளனர். அல்லப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கு அருகில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி நீண்ட காலமாக துப்பரவு...

குடத்தனை சம்பவத்தில் காயமடைந்த பெண்களிற்கு உணவு கொண்டு சென்ற 2 பெண்கள் கைது!

வடமராட்சி கிழக்கு குடத்தனையை சேர்ந்த இரண்டு பெண்கள் நேற்று (1) மாலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று குடத்தனையில் மணல் கடத்தல்காரர் என்ற சந்தேகத்தில் ஒருவரை கைது செய்ய பொலிசார் முயன்றபோது, பெண்கள் ஒன்று சேர்ந்து அதற்கு இடையூறு ஏற்படுத்தினர். பொலிசாரால் பெண்கள் தாக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். எனினும், பொலிசார் அதை மறுத்தனர். இந்த நிலையில்,...

ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு!!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய 21 நிர்வாக மாவட்டங்களிலும் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு அமுல்செய்யப்பட்டு வருகின்றது. அந்த 21 மாவட்டங்களிலும் நேற்று இரவு 8.00 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, எதிர்வரும் திங்கட் கிழமை அதிகாலை 5.00 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. பின்னர் அன்றைய தினம் முதல் இரவு 8.00 மணியிருந்து...

யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முழங்காவில் முகாமைச் சேர்ந்த மற்றொருவருக்கு கோரோனா உறுதி!

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார். தென்னிலங்கையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு கோரோனா தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

தரம் 10 – 13வரை முதல்கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிக்கத் திட்டம்!!

நாடுமுழுவதும் பாடசாலைகளை இரண்டு கட்டங்களாக ஆரம்பிக்க கலந்துரையாடப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தரம் -10 தொடக்கம் தரம் – 13 வரை முதல் கட்டமாக ஆரம்பிக்கத் திட்டமிடப்படுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம். ரத்நாயக்க, கொழும்பு ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். “கோரோனா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து மார்ச் மாதம் 13ஆம் திகதி மூடப்பட்ட பாடசாலைகளை...

முகக் கவசம் அணிந்தால்தான் ‘ஊரடங்கு பாஸ்’ செல்லுபடியாகும்!!

பொலிஸ் அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் சாரதிகள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்வோர் முகக் கவசங்கள் அணிந்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும்...

இலங்கை பின்பற்றி வந்த பொருளாதாரக் கொள்கையிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்

இது வரை காலமும் உலகம் அங்கீகரித்த திறந்த பொருளாதாரக் கொள்கையின் ஆற்றலை கோவிட் தொற்று கேள்விக்குட்படுத்தி வருகிறது. அத்துடன் கோவிட்-19 தொற்றுநோய் இலங்கை பின்பற்றி வந்த பொருளாதாரக் கொள்கையிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற பாடத்தைக் எமக்கு கற்பித்து வருகிறது என்று பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்....
Loading posts...

All posts loaded

No more posts