Ad Widget

கொட்டடிப் பகுதியில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கொட்டடி மீனாட்சி அம்மன் ஆலய வீதிப் பகுதியில் தனியார் காணியொன்றில் கொட்டகை அமைப்பதற்காக நிலத்தை தோண்டியபோதே இவ்வாறு மண்டையோடு மற்றும் எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியானது 2006ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது மண்டையோடு மற்றும் பெண்கள் அணியும் ஆடையும் மீட்கப்பட்டுள்ளது.

Related Posts