Ad Widget

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்து நாடாளுமன்றப் பயணத்தைத் தொடங்கினார் விக்னேஸ்வரன்!!!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரன், தனது நாடாளுமன்றப் பயணத்தை முள்ளிவாய்க்கால் மண்ணில் சத்தியப்பிரமாணத்துடன் ஆரம்பித்துள்ளார்.

முல்லைத்தீவில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதூபிக்கு இன்று (12) காலை சென்ற விக்கினேஸ்வரன், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அத்துடன், தனது சத்திய பிரமாண உரையையும் நிகழ்த்தினார்.

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த விக்கினேஸ்வரன், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல் தடவையாக நாடாளுமன்றம் செல்லவுள்ள நிலையிலையே, முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளைமறுதினம் (15) முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts