யாழ் மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ் மாவட்டத்தை அவதானிக்கும் போது இன்னும் அபாயமான கட்டம் நீங்க வில்லை. எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவு முதற்கட்டமாக...

கோவிட்-19 டெல்டா திரிபு நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் ஆபத்து!!

இந்தியா முழுவதும் வேகமாகப் பரவியிருக்கும் கோவிட்-19 டெல்டா வரைஸ் திரிபு வகையை இலங்கையில் கண்டுபிடிப்பது மிகவும் ஆபத்தானது என்று இலங்கை பொது சுகாதாரப் பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. புத்தளத்தில் ஊடகங்களுடன் பேசிய சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண, கோவிட்-19 டெல்டா வைரஸ் திரிபு பரவியதாகக் கூறப்படும் கொழும்பில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது...
Ad Widget

யாழில் திருமண நிகழ்வில் பங்கேற்ற 13 பேருக்கு கொரோனா!!

சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு பகுதியில் அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4ஆம் திகதி, பண்டத்தரிப்பு பகுதியில் சுகாதார பிரிவின் அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட 78 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர்.பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா வைரஸ்...

எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமுலில்...

தமிழர்களுக்கு தீர்வை வழங்க இந்தியா- அமெரிக்கா முன்வர வேண்டும்- சிவாஜிலிங்கம்

இந்தியா- அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை விவகாரத்தில் இனியும் தலையிடவில்லை என்றால் 13 ஆவது திருத்தச்சட்டமும் இல்லாது போய்விடும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியாவிடம் ஒன்றையே...

யாழில் யாசகர்களுக்கு மதிய உணவுகள் வழங்கிய பொலிஸார்!

யாழ்ப்பாணம் நகரப்பகுதியிலுள்ள யாசகர்களுக்கு, மதிய உணவுகள் பொலிஸாரினால் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன. பயணத்தடை காரணமாக யாழ்.நகரை சூழவுள்ள பகுதிகளிலுள்ள யாசகர்கள், உணவுக்காக பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். இந்நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள், உணவில்லாமல் பாதிக்கப்பட்ட யாசகர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கியுள்ளனர். குறித்த நிகழ்வினை நாளையும்...

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட கொரோனாப் பரிசோதனை ஆய்வு கூடத்துக்கு தானியங்கி ஆர். என். ஏ பிரிப்பு இயந்திரம் அன்பளிப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கொரோனாப் பரிசோதனை ஆய்வு கூடத்துக்கு 4.8 மில்லியன் ரூபா பெறுமதியான தானியங்கி ஆர். என். ஏ பிரிப்பு இயந்திரம் ஒன்று புலம்பெயர் தமிழரான சுப்பிரமணியம் கதிர்காமநாதனால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ பீட கொரோனாப் பரிசோதனை ஆய்வு கூடத்தின் தேவைகருதி, யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி இந்த அன்பளிப்புக்கான...

புத்தூர் வீதியில் சென்றவர் மயங்கி விழுந்து மரணம்!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தவர் திடீரென மயக்கமுற்று விழுந்து உயிரிழந்துள்ளார். புத்தூர் – நிலாவரை வீதி வழியாக இன்று(வியாழக்கிழமை) காலை 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, திடீரென மயக்கமுற்று வீதியில் விழுந்துள்ளார். அவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு அச்சுவேலி வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். அவர்...

மீன் வியாபாரியிடம் கையூட்டு பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸாருக்கு இடமாற்றம்!

பயணத்தடை காலப்பகுதியில் அனுமதிப்பதிரத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரியிடம் கையூட்டுப் பெற்றதாக குற்றச்சாட்டுக்கு முகம் கொடுத்துள்ள பொலிஸ் அதிகாரிக்கும், உத்தியோகஸ்தருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. கொரோனா நோய்த்தொற்று பயணத்தடை காலப்பகுதியில் நடமாடும் மீன் வியாபாரிகளுக்கு நல்லூர் பிரதேச செயலாளரினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது. அதனைப் பயன்படுத்தி மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியை...

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி மறுப்பு!!

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது. பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளதுடன், முத்திரையிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, மதுபான விற்பனையை இணையத்தளம் வழியாக மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு மதுவரித்திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியது. எனினும் நாட்டில் கொரோனா பரவல்...

யாழில். கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த தொழிலாளிக்கு கொரோனா!

கட்டட வேலையில் ஈடுபட்ட போது, மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த தொழிலாளிக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. அச்சுவேலியில் நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டைச் சேர்ந்த நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா (வயது-36 ) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார். கட்டடத்தின் மேல் தளத்தில் சன்செட்டுக்கு...

பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து தீர்மானிக்க பல வாரங்களாகும்!!!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து தீர்மானிக்க பல வாரங்களாகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதியின் பின்னர் பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது தொடர்பாக எதிர்வரும் நாட்களில் கிடைக்கவுள்ள பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய...

இலங்கையில் பயணக்கட்டுப்பாடு தொடருமா? – நாளை தீர்மானம்

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு தொடருமா அல்லது நீக்கப்படுமா என்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை நாளை சந்திக்கவுள்ள கொரோனா பணிக்குழு தற்போதைய நிலைமையை மறுஆய்வு செய்து இந்த விடயம் குறித்து தீர்மானிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்...

வேகமாகப் பரவக்கூடிய டெல்டா வகை வைரஸ் கொழும்பில் அடையாளம்!

கொரோனா வைரஸின் மிகவும் பரவக்கூடிய டெல்டா வைரஸான B.1.617.2 மாறுபாடு கொழும்பில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல்துறை பீடத்தின் பிரதானி, வைத்தியர் சந்திம ஜீவந்தர இந்த விடயம் குறித்து இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார். கொழும்பில் பெற்றுக் கொண்ட பரிசோதனை மாதிரிகளின் ஊடாக இதனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி,...

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் – இந்திய உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு!!

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை வழங்குவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐந்து பேரடங்கிய குழுவினர் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை இன்று (வியாழக்கிழமை) இந்திய இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து ருவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், வடக்கு, கிழக்கு உட்பட...

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!!

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு உகந்த சூழல் உருவாக்கப்பட்டவுடன் பாடசாலைகள் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். பாடசாலை மீண்டும் திறப்பதற்கான பின்னணியை முறையாக தயாரிப்பது குறித்து இன்று நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் ஊடகங்களிடம் இதனைக் குறிப்பிட்டார். பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான முதல்...

முதியவர்கள், மாணவர்களுக்கு சுகாதாரத்துறை வழங்கும் அறிவுறுத்தல்!!

எந்தவொரு நீண்டநாள் நோய் நிலமையை உள்ள முதியவர்களை பொருத்தமான மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்குமாறு சுகாதாரத் துறை கோருகிறது. கோவிட்-19 தொற்றுநோயால் தங்கள் நோய்களுக்கு சிகிச்சை பெற தயக்கம் காட்டியதால் முதியவர்கள் சிலர் வீட்டில் உயிரிழப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையின் முதியோர் பிரிவின் மருத்துவ வல்லுநர் தில்ஹார சமரவீர தெரிவித்தார். இன்று சுகாதார...

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி!!

இணையத்தளம் (online) ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சகல மதுபான நிலையங்களும் மூடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, இணையத்தளம் ஊடாக சில அங்காடிகள் மூலம் மதுபானம் விற்பனை செய்ய...

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற 78 இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் அவர்களது உறவினர்கள் தங்களது வீடுகளில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று(புதன்கிழமை) காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது உறவுகளை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை...

பயணத்தடையை நீக்குவது பற்றி 19 அல்லது 20இல் தீர்மானம்!!

நாடுமுழுவதும் பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்த முடிவை ஜூன் 19 அல்லது 20ஆம் திகதிகளில் மட்டுமே எடுக்க முடியும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்ல தெரிவித்தார். இன்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற இணையவழி அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடை...
Loading posts...

All posts loaded

No more posts