Ad Widget

குழந்தை பிரசவித்து 10 நாட்களின் பின்னர் தாய் உயிரிழப்பு – யாழில் மேலும் 8 உயிரிழப்புகள் பதிவு!

யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் குழந்தை பிரசவித்து 10 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிறந்த குழந்தைக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகராசா பிரியதர்ஷினி (வயது -33) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இதேநேரம், கைதடி அரச முதியோர் இல்லத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்றுடன் அடையாளம் காணப்படு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், இவர்கள் இருவர் உட்பட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts