Ad Widget

யாழில் 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!!

யாழ். மாவட்டத்தில் 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட J/26 கிராமசேவகர் பிரிவு, மருதங்கேணிப் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட J/432 மற்றும் J/433 ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பை தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts