Ad Widget

தர்மலிங்கத்தின் 36ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு!

தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாத செல்வாக்குமிக்க தலைவர் வி.தர்மலிங்கத்தின் 36வது நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், தாவடி பகுதியில் உள்ள அமரர் வி.தர்மலிங்கத்தின் நினைவு தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் மறைந்த அமரர் வி.தர்மலிங்கத்தின் நினைவு தூபிக்கு சுடர் ஏற்றி, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாட்டில் அமுலிலுள்ள பயணத் தடை காரணமாக மட்டுப்படுத்தப்பட்டவர்களின் பங்குபற்றுதலோடு, சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி, நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, சுன்னாகம் பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Posts