Ad Widget

என்னிடம் பல கேள்விகள் உள்ளன; நவநீதம்பிள்ளை

இலங்கையில் மனித உரிமை நிலைமையை பற்றிய முழு அறிக்கையை கொடுக்க தனக்கு காலம் எடுக்குமெனவும், இலங்கையில் மனித உரிமை நிலைமை தொடர்பில் என்னிடம் பல கேள்விகள் உள்ளன என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். (more…)

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக நவீபிள்ளை உறுதி

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத்தர முடியும்' என்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உறுதியளித்ததாக வடமாகாண பிரஜைகள் குழு தெரிவித்தது. (more…)
Ad Widget

நவநீதம்பிள்ளையை சந்தித்தார் அனந்தி!

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும் வடமாகாண சபை த.தே.கூட்டமைப்பின் வேட்பாளருமான அனந்தி சசிகரன் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். (more…)

காணாமல் போனோர் சங்க ஆர்ப்பாட்டத்தை கண்டுகொள்ளாது சென்றார் மனித உரிமைகள் ஆணையாளர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இங்கு பல்வேறு சந்திப்புகளை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டிருந்தார். (more…)

பயங்கரவாதிகளின் அபிலாஷைகளை நிறைவேற்ற சில அரசியல்வாதிகள் முயற்சி – மஹிந்த ஹத்துருசிங்க

நாட்டில் நிலைகொண்டிருந்த பயங்கரவாதிகளின் அபிலாஷைகளை நிறைவேற்ற சில அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள்' என்று யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். (more…)

சுரேஷ் பிரேமச்சந்திரன் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்படுகின்றார்: தவராஜா

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் எஸ்.தவராஐா குற்றம்சாட்டியுள்ளார். (more…)

பொலிஸார் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டனர்: தம்பிராசா

தன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது அருகில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று வாகனங்களையும், தாக்குதல் சூத்திரதாரிகள் 12 பேரையும் 24 மணித்தியாலயங்களுக்குள் கைதுசெய்வதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண உறுதியளித்திருந்த நிலையில், (more…)

தென்மராட்சியில் படையினர் பயன்பாட்டிலிருந்த காணிகள் மற்றும் வீடுகள் மக்களிடம் கையளிப்பு

தென்மராட்சி பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரின் பயன்பாட்டில் 17 வருடங்களாக இருந்த 29 ஏக்கர் காணியும் 10 வீடுகளும் நேற்றய தினம் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. (more…)

சுன்னாகம் மின் உப நிலையம் அடுத்த மாதம் முதல் இயங்கும் – மின்சக்தி எரிசக்தி அமைச்சு

சுன்னாகம் மின் உப நிலையத்தின் ஊடாக யாழ். குடாநாட்டுக்கு மின்சாரத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடக்கம் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)

த.தே.கூ உறுப்பினர் கூட்டமைப்புடன் இணைவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பனர் வி.சிவநாதன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்துள்ளார். (more…)

ஈ.பி.டி.பி. அலுவலகம் முன் தேர்தல் விதிமுறை மீறல், ஐ.தே.க. முதன்மை வேட்பாளர் முறைப்பாடு

யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்துக்கு முன்பாக திடீரென ஏற்படுத்தப்பட்டுள்ள வேகத் தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரி, யாழ்.மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரிடம், ஐ.தே.க. முதன்மை வேட்பாளர் தி.துவாரகேஸ்வரன் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

பிரதேச அபிவிருத்தியை கருத்தில் கொண்டு சரியான வேட்பாளர்களை தெரிவு செய்யவும் – அங்கஜன்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியின் வடமாகாண சபைத் தேர்தல் வேட்பாளருமாகிய அங்கஜன் இராமநாதனின் மக்கள் சந்திப்பு ஒன்று சிறுப்பிட்டியில் இடம்பெற்றது. (more…)

யாழில் நவநீதம்பிள்ளை: வடமாகாண ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபருடன் இன்று சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நேற்றய தினம் யாழ்ப்பாணம் வந்தடைந்தார். (more…)

சாதி கட்டமைப்பு ஒழிக்கப்பட வேண்டும். -அங்கஜன்

இப்பிரதேச மக்கள் என்னுடன் இணைந்தவர்கள் இவர்களை சாதிக்கட்டமைப்பால் ஒதுக்க எவராலும் முடியாது. சாதிக்கட்டமைப்பானது ஒழிக்கப்பட வேண்டும் அதிலும் அரசியலில் சாதி கட்டமைப்பு முறை வருவது தவறான ஒன்றாகும். (more…)

மகன் இறக்க முன்னர் தனது உயிரைமாய்த்துக் கொண்ட தாய்!

தனது மகனை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் வைத்தியருந்த தாய்க்கு வைத்தியர்கள் எனிமேல் சிகிச்சை பலன் தரப்போவது இல்லை எனவும் மகனை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என தெரிவித்ததனால் மனமுடைந்த தாய் மகன் இறக்க முன்னர் தனது உயிரைமாய்த்துக் கொண்ட சம்பவம் வடமராட்சியில் சோகநிலையை ஏற்படுத்தியுள்ளது. (more…)

நாளை யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. (more…)

அதிகரித்து வரும் வலி நிவாரணி பாவனை உயிருக்கு ஆபத்தானது: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வலி நிவாரணி மற்றும் இருமல் மருந்து பாவனை அதிக இறப்புக்களுக்கு காரணமாகின்றது என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. (more…)

வடக்கு மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைப்பதற்கு முயற்சி! – தி.துவரகேஸ்வரன்

வடக்கு தேர்தலில் வன்முறைகள் மூலம் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி மக்களை அச்சத்திற்குட்படுத்தி மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைக்கும் முயற்சி நடைபெறுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரான தி.துவரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

கொலைகார அரசுக்கு வாக்களிக்காதீர்கள்; வடக்கு மக்களை கோருகிறது கூட்டமைப்பு

எங்கள் உறவுகளை ஈவு இரக்கமின்றி கொன்றொழித்த கொலைகார அரசுக்கோ அல்லது அதனுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கின்ற ஒட்டுக் குழுக்களுக்கோ தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது இவ்வாறு வடக்கு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது .தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. (more…)

தமிழ் பேசும் அரசே நிறுவப்படவேண்டும்; சி.வி. விக்னேஸ்வரன்

வடமாகாணத்தில் தமிழ் பேசும் அரசு நிறுவப்பட வேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழனும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் - என்று தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts