Ad Widget

யாழில் உலக புகையிலை எதிர்ப்பு தினம்

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ்.நகர் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ‘ஏமாற்றத்திற்கு அகப்படாதீர்கள்’எனும் விழிப்புணர்வுத் திரைப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டது.

no-smoke

இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா இந்த திரைப்பலகையை திரை நீக்கம் செய்து வைத்து கருத்து தெரிவிக்கையில்,

யாழ்.மண்ணில் இடம்பெறும் புகையிலை எதிர்ப்பு தின நடை பவனியானது மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். அத்துடன் எதிர்கால சந்ததியினரும் இந்த புகைத்தல் பழக்கத்திலிருந்து மீளும் ஒரு சமூகமாக உருப்பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை யாழில்.உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ‘புகை சுகத்தின் பகை,புகைத்தலில் செலவிடுதலை உன் பிள்ளையின் படிப்பில் முதலிடு ‘ போன்ற பதாகைகளைத் தாங்கியவாறு இந்த விழிப்புணர்வுப் பேரணி இடம்பெற்றது.

no-smoke-2

இன்று காலை 8மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமாகிய இந்தப் பேரணி மு.ப 11மணியளவில் யாழ்.வீரசிங்கம் மண்பத்தில் நிறைவு பெற்றது.

இந்த விழிப்புணர்வுப் பேரணியை யாழ்.பல்கலைக்கழக சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத் துறையுடன் இணைந்து யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் மருத்துவ விஞ்ஞான பிரிவு,யாழ்ப்பாண மருத்துவச் சங்கம் மற்றும் சமூக நிறுவனங்கள் என்பன இணைந்தே இந்த புகையிலை விழிப்புணர்வுப் பேரணியை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts