- Saturday
- July 5th, 2025

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் பல நவீன வசதிகளைக் கொண்டமைந்த கலாசார மண்டபத்துக்கான அடிக்கல் அடுத்த மாத இறுதிக்குள் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

இலங்கையில் உள்ள ஆயிரம் விஞ்ஞான ஆய்வு கூடங்களில் 91 ஆய்வு கூடங்கள் வடமாகாணத்திலே உள்ளதுடன் ஏனைய மாகாணத்துடன் ஒப்பிடும்போது வடமாகாணமே அதிகளவு விஞ்ஞான ஆய்வு கூடங்களைக் கொண்டிருப்பதாகவும் வடக்கு ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி தெரிவித்தார். (more…)

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றுவதற்காக தமிழ் பேசும் வைத்தியர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுப்பி வைக்குமாறு, வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

பொதுமக்களின் ஒரு அங்குலம் நிலத்தினை கூட இராணுவம் அபகரிக்க அனுமதிக்க முடியாது' என வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். (more…)

யாழ். மாவட்டம் மட்டுமல்லாது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள காணி உரிமையாளர்கள் காணி சுவீகரிப்பு தொடர்பாக உடனடியாக நீதிமன்றங்களில் வழக்கு தொடருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேட்டுக்கொண்டுள்ளார். (more…)

வடமாகாணத்தில் பனைசார் உற்பத்தியை மேம்படுத்த பனை ஆராய்ச்சி மாநாடு இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. (more…)

இராணுவத்தினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பிற்கு எதிராக சாவகச்சேரி நுணாவில் மத்தி பொதுமக்கள் இன்று காலை 10 மணியளவில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். (more…)

தேசிய பாவனைக்குதவாத இலத்திரனியல் மற்றும் மின் சாதனங்களின் முகாமைத்துவ வாரத்தை முன்னிட்டு இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் நல்லூர் கோயில் அருகில் இலத்திரனியல் மற்றும் மின்கழிவு சேகரிப்பு நிகழ்வு இடம்பெறுகிறது. (more…)

இராணுவத்தினர் முன்னெடுக்கும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக அச்சுவேலி பொதுமக்கள் இன்று காலை 8 மணியளவில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். (more…)

வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதி உள்ளிட்ட ஏனைய பகுதிகளினது அபிவிருத்தி தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்தி வருகின்றோம்' என பாரம்பறிய மற்றும் சிறுகைதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

இந்தியப் பிரதமராகப் பதவியேற்றிருக்கும் நரேந்திரமோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து, இந்து சமயப் பேரவை மற்றும் இலங்கை இந்திய இந்து மக்கள் நட்புறவுக் கழகம் என்பன இணைந்து சிறப்பு பூசையை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தின. (more…)

பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பிலிருந்து பாலியல் கல்வி இனிமேல் கட்டாய விஞ்ஞான பாடமாகப் போதிக்கப்படும். (more…)

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு தமிழ் பெண் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் தமிழ் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (01) முன்னெடுக்கப்பட்டது. (more…)

கிளிநொச்சியிலிருந்து பளை வரை தற்போது விஸ்தரிக்கப்பட்டுள்ள வடக்கிற்கான ரயில் சேவைகள் இம்மாத இறுதிக்குள் சாவகச்சேரிவரை இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

வலி. மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சங்கானை பேரூந்து நிலையத்தில் போடப்பட்ட புகைத்தல் விழிப்புணர்வு பதாகை விசமிகளால் கிழிக்கப்பட்டுள்ளது. (more…)

மருதங்கேணி கட்டைக்காடு, நித்தியவட்டி காட்டுப்பகுதியில் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இலங்கை அரசுக்கு எதிரான ஐ.நாவின் விசாரணை இம் மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்றும், இது தமிழரின் அரசியல் தீர்வுக்கான வழி வகையை உறுதி செய்யும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். (more…)

பிரிமா கோதுமை மா கிலோவின் விலையில் 2 ரூபா 50 சதத்தினால் அதிகரிப்பதற்கு பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

All posts loaded
No more posts