Ad Widget

ஆணின் சடலம் மீட்பு

dead-footகல்வியங்காடு செம்மணி வீதியில் வெய்யில் வீழ்ந்த பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள பிரதேசத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (21) காலை மீட்கப்பட்டதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தினைச் சேர்ந்த மணல் விற்பனையில் ஈடுபடும் அப்புத்துரை சுகுணதாசன் (வயது 50) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related Posts