Ad Widget

வடமாகாண ஆளுநராக பதவியேற்றார் ஜி.ஏ.சந்திரசிறி

GA Chandrasiriவடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்றது.

மும்மத தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் ஆளுநர் தனது இரண்டாவது பதவியேற்புக் காலத்தினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, ஆளுநரும் அவரது பாரியாரும் முன்பள்ளி சிறார்களுக்கு பரிசில்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில், வடமாகாணப் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, யாழ்.மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் ரூபினி வரதலிங்கம், யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts