- Wednesday
- May 13th, 2026
8 வது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 01ம் திகதி புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வுகள் இடம்பெற்றிருந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கான வெற்றிடம் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று பாராளுமன்றம் மீண்டும் கூடிய போது சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சி தலைவராக இரா. சம்பந்தனை அறிவித்தார்....
இந்தியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் இலங்கை அணி 1–2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இந்த போட்டி தொடரில் 13 விக்கெட்டுகள் வீழ்த்திய 22 வயதான இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தாரிந்து கவ்ஷல் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. அவரது பந்து வீச்சு விதிமுறைக்கு...
ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரே ஒரு புகைப்படம் சொல்லிவிடும். விட்நாமில் அமெரிக்கா நடத்திய கொடூராத்தை உலகுக்கு காட்டியது ஒரு புகைப்படம் தான், ஆப்ரிக்காவில் நிலவிய கொடிய வறுமையை சரியாக உணர்த்தியது ஒரே ஒரு புகைப்படம் தான். தாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பது கூட அறியாத நிலையில் போரில் ஒவ்வொரு நாளும் பல குழந்தைகள் பலியாகிவருகிறார்கள்....
2016 ஜனவரி மாதம் முதல் வெளியிடப்படும் தேசிய அடையாள அட்டைகளின் தொடர் இலக்கங்களை பதிவு செய்யும் போது 9 இலக்கங்களுக்கு பதிலாக 12 இலக்கங்களை பதிவு செய்வதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அத்துடன் அடையாள அட்டையின் தொடர் இலக்கங்களின் இறுதியில் பதியப்படும் V குறியீட்டையும் நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக...
"நாட்டுக்காக அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு இடம்பெறவுள்ள எனது பயணம் வேகமான பயணம் அல்ல. இது மெதுவான பயணம் என்பதால் மீள்திருப்பம் இல்லை." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை நாட்டில் அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக கட்சியை முழுமையாக மறுசீரமைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64ஆவது மாநாடு...
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான பாடசாலை அதிபரை தொடர்ந்தும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செல்லையா கணபதிபிள்ளை, செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டார். சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, அதிபருக்கு பிணை வழங்குமாறு மன்றில் கோரியிருந்தார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த சாவகச்சேரி பொலிஸார், சந்தேக நபர் அங்கு கல்வி...
யாழ் மாநகர சபை ஆணையாளராக பொன்னம்பலம் வாகீசன், உள்ளூராட்சி அமைச்சின் உள்ளூராட்சி ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரைகாலமும் கூட்டுறவு ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றியுள்ளார். இதுவரைகாலமும் யாழ். மாநகர சபை ஆணையாளராக கடமையாற்றிய செ.பிரணவநாதன், வடமாகாண மேலதிக கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை (02) அமுலுக்கு வரும் வகையில் இம் மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பாலேந்திரன் ஜெயக்குமாரியை மீண்டும் பொலிஸார் கைது செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்ட இவர் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகின்றது. முன்னரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே நீதிமன்றின் ஊடாக விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64ஆவது பிறந்த தினம் இன்றாகும். ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பொலன்னறுவையில் நேற்றும் இன்றும் பல்வேறு சமய நிகழ்வுகள் நடந்தவண்ணமுள்ளன. ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி நேற்று இரவு (02) சோமாவதி தூபியின் முன்னால் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றது. கப்றுக் பூஜை மற்றும் கிரி ஆஹார பூஜை என்பன இன்றுகாலை நடைபெறுகின்றன....
இலங்கையில் திருமணங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான கடந்த 4 ஆண்டு காலத்தில் நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு 2 லட்சத்து 314 பதிவு திருமணங்கள் நடந்துள்ளன. 2012 ஆம்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை யான ஏழு நாட்களும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் வீடுகள் மற்றும் சுற்றுச் சூழலை சோதனையிட வரும் அதிகாரிகள் குழுவினருக்கு பூரண ஒத்து ழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சின் பணிப்பாளர்...
சர்வதேச விசாரணை கோரி வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ,நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண அவைத் தலைவர் சிவிகே.சிவஞானம் தெரிவித்தார். தமிழர்கள் மீதாக இன அழிப்பு தொடர்பில் ஐ.நா சபை விசாரணை வலியுறுத்தி வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை உறுப்பினர்கள், அமைச்சர்கள் உறுதிப்படுத்திய பின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் கையோப்பத்துடன் ஐ.நா.சபை அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக...
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச உதவியுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச அழுத்தக் குழுவான இன்டர் நேஷனல் க்ரைசிஸ் க்ரூப்பின் இலங்கைத் திட்ட இயக்குனர் ஆலன் கீனன் கூறியிருக்கிறார். பிபிசிக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கையுடன் இணைந்து...
பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பதவியேற்றிருப்பதன் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முன்வந்திருப்பதை வரவேற்பதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அர்த்தமற்ற பகைமையுணர்வை கொட்டித் தீர்ப்பதன் மூலம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு...
இலங்கை நாடாளுமன்றத்தில் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி 8வது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்படவுள்ளார். இந்த நியமனம் நாளை 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும்...
தற்போது மக்களுடைய கைகளில் பணம் அளவுக்கதிகமாக புழங்குவதன் காரணமாக ஆன்மீகத்திலிருந்து தூர விலகி லௌகீக வாழ்க்கை வாழும் காலம் வந்து விட்டது என்று ,வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் தெரிவித்துள்ளார். இன்று 23ஆவது நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், துன்பம்...
கொழும்பு விஹாரமகா தேவி பூங்காவில் இலவச WiFi வசதியை பெற்றுக்கொடுக்க கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய நாளை முற்பகல் விஹாரமகா தேவி பூங்காவின் வை-பை வலயம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாநகர சபை விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி அதிபரின் இடமாற்றத்தை கண்டித்து மூன்றாவது நாளாக மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகின்றது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் மாணவர்களின் போராட்டத்தை கவனத்தில் கொள்ளவில்லை. எதிர்வரும் நாட்களில் தமக்கான நீதி கிடைக்கா விட்டால் வீதி மறியல் போராட்டம் செய்யப் போவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா மாணவர்களின் போராட்டம்...
கஞ்சா கலந்த போதைப்பாக்கினை உடமையில் வைத்திருந்த தனியார் பஸ் நடத்துனர் ஒருவரை, நேற்று செவ்வாய்க்கிழமை (01) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர், வவுனியா பகுதியினை சேர்ந்த 28 வயதுடையவர் என்றும் பயணியொருவர் வழங்கிய தகவலையடுத்து யாழிலிருந்து வவுனியாவுக்குச் செல்லும் தனியார் பஸ் நிலையத்தில் நடத்துனரை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.நகரத்தில் இருக்கும் விளம்பர சேவைப் பிரிவு மாநகர சபையில் உரிய அனுமதிகளைப் பெறாது பழைய அனுமதியுடன் அடாத்தாக நடத்தப்பட்டு வருவதாக உறுப்பினர் ஆ.பரஞ்சோதி குற்றஞ்சாட்டினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வின் போதே இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார். மகேஸ்வரி நிதியத்தால் யாழ்.மாநகர சபையிலிருந்து அனுமதி பெற்று நடத்தப்பட்ட இந்த விளம்பர சேவை, தற்போது வேறு ஒருவருக்கு...
Loading posts...
All posts loaded
No more posts
