விஜய்க்கு தந்தையாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்

பிரபல இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடைசியாக ‘டூரிங் டாக்கீஸ்’ என்னும் படத்தை இயக்கி நடித்திருந்தார். நீண்ட நாட்களாக படங்களை இயக்காமல் இருந்த இவர் தற்போது தந்தை கதாபாத்திரத்திற்கு நடிக்க தயாராகி வருகிறார். துரை செந்தில் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில், தனுஷுக்கு தந்தையாக நடிக்க எஸ்.ஏ.சந்திரசேகர் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுதவிர, பாடலாசிரியர் பா.விஜய்...

உன் வயதைவிட சச்சினின் சதம் அதிகம்: மைக்கேல் கிளார்க்கின் மூக்கை உடைத்த சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரராக விளங்கியவர் வீரேந்திர சேவாக். இவர் தனது பிறந்த நாளான கடந்த 20-ந்தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்து வருகிறார். அந்த வகையில், அவர் சச்சினுடன் இணைந்து ஆஸ்திரேலியாவில் விளையாடியபோது கிளார்க் தொடர்புடைய ஒரு சம்பவத்தை தற்போது...
Ad Widget

யாழ். நகர உணவகங்களில் பெரும் சுகாதார சீர்கேடுகள்! கண்டும் காணாமல் அதிகாரிகள்!!

யாழ். நகரில் இயங்கும் பல உணவகங்களிலும் பெரும் சுகாதாரச் சீர்கேடுகள் இடம்பெறுகின்றன என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனினும் இது விடயத்தில் சுகாதாரப் பிரிவினர் கண்டும் காணாதபோக்கில் செயற்படுகின்றனர் எனவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அண்மையில் யாழ். புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவுக்குள் தீக்குச்சி காணப்பட்டதுடன், இறைச்சியில் அகற்றப்படாத இறக்கையும் காணப்பட்டதாக...

212 பயணிகளுடன் எகிப்தில் இருந்து புறப்பட்டு சென்ற ரஷ்ய விமானம் வெடித்து சிதறியுள்ளது

212 பயணிகளுடன் எகிப்தில் இருந்து புறப்பட்டு சென்ற ரஷ்ய விமானம் வெடித்து சிதறியுள்ளது. ஷாம் எல்ஷேக் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. விமானத்தில் ரஷிய சுற்றுலா பயணிகள் அதிகமாக இருந்தாக கூறப்படுகிறது. எகிப்து எல்லையை கடந்து ரஷ்ய நோக்கி சென்ற போது சினை பெனிசுலாவில் சார்கோ...

ஆவியாக அலைபவர்களை மகிழ்விக்கும் ஹாலோவியன் திருவிழா

வெளிச்சத் திருவிழா என்றுக் கூறப்படும் " ஹாலோவியன்" அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது அமெரிக்காவின் தீபாவளி ஆகும். இறந்த பிறகு சொர்க்கத்துக்கும் போகாமல், நரகத்துக்கும் போகாமல் ஆவியாக அலைந்து கொண்டிருப்பவர்களை மகிழ்விக்கும் நன்னாள் தான் இந்த "ஹாலோவியன்". இதுபோன்ற கெட்ட ஆவிகளை மகிழ்ச்சியடையச் செய்வதன் மூலம் தங்களுக்கு எந்த விதமான...

பருத்தித்துறை பொலிஸ் நிலைய கட்டடம் திறந்து வைப்பு

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் பருத்தித்துறை பொலிஸ் நிலைய புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதி இன்று காலை பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனின் அழைப்பின் பேரில் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாறப்பனவினால் திறந்து வைக்கப்பட்டது. 1938ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கான, புதிய கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த...

2017ல் அனைத்து அரச நிறுவனங்களிலும் இலவச wifi

2016ஆம் ஆண்டில் அரச நிறுவனங்களில் இலவச wifi வலயங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம், 2016ஆம் ஆண்டில் 3500 அரச நிறுவனங்களில் இலவச wifi வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் இலவச wifi வலயங்களை...

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது இனச் சுத்திகரிப்பு – எம்.ஏ.சுமந்திரன்

தமிழ்,முஸ்லிம் சமூகங்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை வெளிப்படையாகப் பேசுவதன் ஊடாகவே இரு சமூகத்துக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையை தடுக்காமைக்கு ஒவ்வொரு தமிழர்களும் பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், முஸ்லிம் தலைமைத்துவங்களின் செயற்பாடுகள் தமிழர்களிடையே சந்தேகத்தை...

ஐ.நா. விசாரணையை எதிர்கொள்ளத் தயார்! – கருணா அம்மான்

“இலங்கை தொடர்பான ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையில், காணாமல் போகச் செய்யப்பட்டோரை கருணா குழுவினர்தான் கடத்தினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, கருணா கடத்தினார் என்று அதில் தெரிவிக்கப்படவில்லை. எனினும், ஐ.நாவின் விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன்.'' - இவ்வாறு கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில்...

சுன்னாகத்தில் நிலக்கீழ் நீரில் கழிவு ஒயில்: ஆராயப்படும் என்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த!

"யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கழிவு ஒயில் நிலக்கீழ் நீரில் கலந்துள்ள விடயம் தொடர்பில் கனிய எண்ணெய் அமைச்சினூடாக ஆராய்ந்து பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று ஊடகத்துறை மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர்...

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் மேயராகத் தெரிவு

அவுஸ்திரேலிய நகர் ஒன்றில் இலங்கைப் பெண் ஒருவர் மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மோர்லாண்ட் நகரின் மேயராக இலங்கைப் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இலங்கையில் பிறந்த குறித்த பெண் யுத்தம் காரணமாக பெற்றோருடன் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார்.கிறீன் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சமந்தா ரட்னம் என்ற பெண்ணே இவ்வாறு மேயராகத் தெரிவாகியுள்ளார். தொழிற்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து சமந்தா...

இலங்கையில் இணைய பாவனை சுதந்திரம் முன்னேற்றம்! – சர்வதேச அமைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் இலங்கையில் இணையத்தள பாவனை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் ப்ரீடம் ஹவுஸ் எனும் அமைப்பு சர்வதேச ரீதியான இணையத்தள பாவனை சுதந்திரம் பற்றி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த வருடத்தை விட இந்த ஆண்டில் இலங்கையர்களுக்கு இணையத்தள பாவனை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக...

சரணடையும் திட்டத்துக்கு புலிகளின் தலைமை சாதகமாக பதிலளிக்கவில்லை! – எரிக் சொல்ஹெய்ம்

போரின் கடைசிக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் சாதகமாகப் பதிலளிக்கவில்லை என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் கடந்த 28ம் திகதி நடந்த “ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, இலங்கையில் நோர்வேயின்...

மகிந்த ஆட்சியில் இனஅழிப்பே நடந்தது! – வெளிவிவகார அமைச்சர்

மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் பௌத்த நாடு என்ற பெயரில் சிறுபான்மை இன மக்களான தமிழ், முஸ்லிம்களை இலக்குவைத்து திட்டமிட்ட இனஅழிப்பும், அடக்குமுறையும் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு கொழும்பில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில்...

சங்குப்பிட்டியில் சமூகச் சீர்கேடுகள்

கிளிநொச்சி, பூநகரி சங்குப்பிட்டிப் பாலப் பகுதியில் சமூகச்சீர்கேடான விடயங்கள் இடம்பெறுவதாகவும் அதனைக் கட்டுப்படுத்த பிரதேச சபை இணைந்து செயற்படவேண்டும் என பூநகரி பிரதேச செயலர் சி.த.கிருஸ்ணேந்திரன் தெரிவித்தார். இவ்விடயத்தை கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளதாக கூறினார். சங்குப்பிட்டிப் பாலப்பகுதி ஒரு சுற்றுலா மையப்பகுதியாக மாறிவரும் நிலையில் சமூக சீர்கேடுகள் நிகழ்வதற்கான...

2016 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டி பங்களாதேஷில்!

2016 ஆம் ஆண்டுக்கானதும், 13 ஆவதுமான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை பங்களாதேஷில் நடாத்த கிரிக்கெட் சம்மேளம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் சிங்கப்பூரில் கடந்த செவ்வாயன்று நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வாண்டிலிருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு...

அரசியல் கைதிகளின் விடுதலையில் கடந்த கால உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படவில்லை – சுரேஷ்

இலங்கையில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள் அனைத்தும் மீறப்பட்ட சூழ்நிலையே காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். பிரத்தியேக நீதிமன்றங்களை அமைத்து அரசியல் கைதிகளின் விசாரணையை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்வதாக முன்னர் கூறியிருந்த போதிலும் அதற்கான சரியான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் அரசியல்...

இந்திய வீட்டுத் திட்டத்தில் 40,000 வீடுகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன – விக்னேஸ்வரன்

இந்திய வீட்டு திட்டத்தில் உறுதி அளிக்கப்பட்ட 50 ஆயிரம் வீடுகளில் 40 ஆயிரம் வீடுகள் மாத்திரமே நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய வீட்டுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மன்னார் தட்சனா மருதமரு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யும் நடமாடும்...

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக மழை; மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு

யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்சியாக பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளமையினால் மழை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்தால், யாழ். பொம்மைவெளி பகுதியை சேர்ந்த மக்கள் முழுமையாக இடம்பெயரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளிட்ட பல்வேறு...

மணநாளில் ஹர்பஜன் சிங் மன்னிப்பு கேட்கக் காரணமான பவுன்சர்கள் கைது

ஜலந்தரில் உள்ள குருத்துவாராவில் ஹர்பஜன் சிங், கீதா பஸ்ரா திருமணம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தின் போது, வீட்டுக்கு வெளியே நடந்த வைபவத்தை அங்கு குழுமியிருந்த சில நிருபர்கள் தங்கள் கேமராவில் வீடியோவாகப் பதிவு செய்தனர். இதைப் பார்த்த பவுன்சர்கள் சிலர் நிருபர்களை தாக்கி, அவர்களது கேமராவையும் பிடுங்கி வைத்துக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த...
Loading posts...

All posts loaded

No more posts