அவுஸ்திரேலிய நகர் ஒன்றில் இலங்கைப் பெண் ஒருவர் மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மோர்லாண்ட் நகரின் மேயராக இலங்கைப் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இலங்கையில் பிறந்த குறித்த பெண் யுத்தம் காரணமாக பெற்றோருடன் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார்.கிறீன் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சமந்தா ரட்னம் என்ற பெண்ணே இவ்வாறு மேயராகத் தெரிவாகியுள்ளார்.
தொழிற்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து சமந்தா தோதலில் வெற்றியீட்டியுள்ளார்.இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் மேயர் பதவிக்காக போட்டியிட்ட சமந்தா வெற்றியீட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா குடும்பத்தினர், 1989ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் சென்று குடியேறியுள்ளனர்.தமக்கு ஆறு வயதான போது அவுஸ்திரேலியா வந்ததாகவும், 83ம் ஆண்டு கலவரம் தமக்கு நினைவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.