கண்டியின் சில இடங்களில் நில அதிர்வு

குண்டசாலை மற்றும் மெததும்பர பிரதேச செயலகப் பகுதிகளிலுள்ள சில இடங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். திகன, அம்பகோட்டை, குபுக்கந்துர, செனரத்வெல, மாபேரிதென்ன, நிதுலேமட ஆகிய பகுதிகளிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 10.15 - 10.45 அளவிலான காலப் பகுதியில் பாரிய சத்தத்துடன் நிலம் அதிர்ந்ததாக மக்கள்...

ஆடைகள் இன்றி வீதியில் செல்ல வேண்டும் என்பதா அவர்கள் கோரிக்கை?

அண்மையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் குறித்து தான் வௌியிட்ட கருத்து தொடர்பில் இணையத்தில் சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இவ்வாறு சேறு பூசுவதால் தனக்கு ஏதும் நேராது என சுட்டிக்காட்டிய அவர், இந்த...
Ad Widget

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜூன் மாதத்தில்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கலப்பு தேர்தல் முறை மூலம் எதிர்வரும் ஜூன் மாத முதல் வாரமளவில் இடம்பெறும் என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

5,000 பட்டதாரிகளுக்கு புதிய நியமனங்கள்

எதிர்வரும் ஒரு சில தினங்களில் முதற்கட்டமாக பட்டதாரிகள் 5000 பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கவுள்ளதாக தொழில் மற்றும் தொழில் சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ. டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...

பாகிஸ்தான் தற்கொலைத்தாக்குதலில் குறைந்தது 22 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தான் நகரான மர்தானில் நடத்தப்பட்ட தற்கொலைகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதாகவும் பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அடையாள அட்டை பெறுவதற்காக பொதுமக்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு அரசு வளாகத்தின் வாயிலில் தற்கொலை குண்டுதாரி இரு சக்கர வாகனத்தை மோதி தாக்குதலை நடத்தியுள்ளார். இறைவன் பெரியவன் என்று கத்தியவண்ணம் அந்த...

தமிழ் மக்கள் பேரவையில் கலந்துகொண்ட மூவரிடம் விளக்கம் கேட்போம்: சிவில் சமூகம்

அண்மையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையில் தாங்கள் உரிய முறையில் உள்வாங்கப்படவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவைக் கூட்டங்களில் கலந்து கொண்ட தமது உறுப்பினர்கள் மூன்று பேரும் நிர்வாகத்தின் அனுமதி இன்றியே அந்த கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது....

வலி வடக்கில் 700 ஏக்கர் காணியை ஒப்படைக்க முடிவு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளில் 700 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் மற்றும் அதனை அண்டிய கிராமங்களிலும், வளலாய், பலாலி கிழக்கு ஆகிய பிரதேசங்களில்...

படப்பிடிப்பில் அசுர வேகம் கொண்டவர் விஜய் ஆண்டனி: சாத்னா டைட்டஸ்

கேரளாவில் இருந்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கி உள்ள ‘பிச்சைக்காரன்’ படத்தில் கதாநாயகியாக சாத்னா டைட்டஸ் அறிமுகமாகிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘இதுவரை என்னை தவிர சினிமாவில் என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் நடித்ததில்லை. ஒரு சில விளம்பரங்களில் விளையாட்டாக...

கவுதம்மேனன், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படம்

டைரக்டராக இருந்து நடிகராக மாறியவர் எஸ்.கே.சூர்யா. தற்போது கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். அடுத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இது திகில் கதை. இதை எழுதியதும் செல்வராகவன்தான். தனுஷ் படம் ஒன்றை செல்வராகவன் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தனுஷ் ஏற்கனவே நடிக்க...

பஸ்ஸில் திருடியவர் பயணிகளால் நையப்புடைக்கப்பட்டார்

பஸ்ஸில் பயணிகளின் பணப் பை மற்றும் கைபைகளில் இருந்து பணத்தை திருடிய நபரை பிடித்து பயணிகள் நையப்புடைத்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று திங்கட்கிழமை (28) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமத்துக்கு செல்லும் பஸ்ஸில் பயணித்த குறித்த நபர், பயணிகளின் பணப்பை மற்றும் கைபைகளில் இருந்து பணத்தை திருடியுள்ளார். இதனை அவதானித்த சக பயணிகள்...

காணாமற்போன மீனவர் சடலமாக மீட்பு

பருத்தித்துறை முனைப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை (28) அதிகாலை கடலுக்குச் சென்று காணாமற்போன மீனவர், முனை வெளிச்ச வீட்டுக்கு அருகிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, சடலமாக மீட்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். முனைப்பகுதியைச் சேர்ந்த எஸ்.ஜோர்ஜ் (வயது 42) என்பவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. முனைப் பகுதியிலிருந்து 3 மீனவர்கள் படகொன்றில் கடலுக்குள் சென்ற போது, கடும் கடற்கொந்தளிப்பால்...

வலிகாமம் வடக்கின் அபிவிருத்திக்கு ரூ.96 மில்லியன்

வலிகாமம் வடக்கில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களில் நெல்சிப் திட்டத்தின் ஊடாக 96 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு வலிகாமம் வடக்கிலிருந்து வெளியேறிய குடும்பங்கள் நலன்புரி நிலையங்கள், உறவினர்கள் வீடுகள் மற்றும் வாடகை வீடுகளில் வசித்து வந்தனர். அவர்களின் காணிகள் இராணுவத்தினரால் உயர்பாதுகாப்பு வலயங்களாக ஆக்கப்பட்டன. இந்நிலையில் யுத்தம்...

அவதூறான செய்திகளை நீக்க கப்பம் கோருகின்றனர் ! துவாரகேஸ்வரன்

தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் சார்ந்து அவதூறான செய்திகளை சில இணையதளங்கள் வெளியிட்டுவிட்டு, அவற்றை அந்த பக்கங்களில் இருந்து நீக்குவதற்காக சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து கப்பம் கோரும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

117 ரன்னில் சுருண்டது மிகவும் மோசமான நாள்: இலங்கை அணியின் பயிற்சியாளர் காட்டம்

நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 27.4 ஓவர்களை மட்டும் சந்தித்து 117 ரன்களில் சுருண்டது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 8.2 ஓவரிலேயே 118 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து...

வடமாகாண சபைக்குட்பட்ட வைத்தியசாலைகளின் ஆளணி பற்றாக்குறை

வட மாகாணசபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் மற்றும் தாதியர்கள் என அனைத்து துறைகளிலும் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் அமைந்துள்ள 110 வைத்தியசாலைகளில் 102 வைத்தியசாலைகளே செயற்படுவதாகவும், அவற்றில் 29 வைத்தியசாலைகளில் ஒரு வைத்தியர் கூட கடமையில் இல்லாத நிலைமையே காணப்படுவதாகவும் அவ்...

அளவெட்டியில் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்து அடித்து நொருக்கிய ஆயுதக் குழு!

அளவெட்டி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றிரவு துப்பாக்கி சகிதம் உள்நுழைந்த ஆயுதக்குழு பெரும் அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளது. அளவெட்டி ஜெயா பிறஸ் சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு ஞாயிறு இரவு 7.30 மணியளவில் துப்பாக்கி , வாள் , இரும்பு கம்பிகள் , பொல்லுகளுடன் நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் ஐன்னல்...

சித்தார்த்தனிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் ! மாவை எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தொடர்பாக விசாரணை ஒன்று முன்னெடுக்க வேண்டும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மவை சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையிடம் கோரியுள்ளது. புளொட்...

கூத்தாடி குறுந்திரைப்படம் வெளியீடு!

அம்பலம் திரைக்கூடத்தின் ‘கூத்தாடி’ குறுந்திரைப்படம் கடந்த திங்கட்கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வெளியிடப்பட்டது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வெளியீட்டுரையை ச.இராகவனும், மதிப்பீட்டுரையை ந.மயூரரூபனும் நிகழ்த்தினார்கள். பாரம்பரிய கலைஞர்களின் வாழ்வியலை பேசும் இந்தக் குறுந்திரைப்படத்தை தர்சனின் ஒளிப்பதிவிலும், ஸ்ரீ நிர்மலனின் இசையிலும், ஸ்ரீ துஷிகரனின் படத்தொகுப்பிலும், பிரதேசக்...

பருத்தித்துறை கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு! மற்றொருவரைக் காணோம்!!

பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற போது படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு மீனவர் காணாமற்போயுள்ளார். இச்சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக படகு ஒன்றில் மூன்று மீனவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். கடும்காற்றுடன் கூடிய மழை கடற்கொந்தளிப்புக் காரணமாக இவர்களின் படகு கவிழ்ந்துள்ளது. இதில் ஒருவர் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டார். ஒருவர்...

புலிகளின் ‘பிஸ்டல் அணி’ துப்பாக்கிகளுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவின் 'பிஸ்டல் அணியினர்' பயன்படுத்திய இரு கைத்துப்பாக்கிகளுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். செவனகல பொலிஸார் கடந்த மூன்று மாதங்களாக நடத்திய விசாரணைகளின் பிரகாரமே இவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் இராணுவத்திலிருந்து தப்பிவந்து பின்னர் சட்டபூர்வமாக அதிலிருந்து விலகியவர் (வயது 45 ) என்று பொலிஸார்...
Loading posts...

All posts loaded

No more posts