Ad Widget

பாகிஸ்தான் தற்கொலைத்தாக்குதலில் குறைந்தது 22 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தான் நகரான மர்தானில் நடத்தப்பட்ட தற்கொலைகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதாகவும் பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அடையாள அட்டை பெறுவதற்காக பொதுமக்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு அரசு வளாகத்தின் வாயிலில் தற்கொலை குண்டுதாரி இரு சக்கர வாகனத்தை மோதி தாக்குதலை நடத்தியுள்ளார்.

இறைவன் பெரியவன் என்று கத்தியவண்ணம் அந்த தற்கொலை குண்டுதாரி இருசக்கர வாகனத்தை மோதியதாகவும், வரிசையில் நின்றிருந்த மக்கள் உடல் சிதறி இறந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்த ஆண்டில் பாகிஸ்தானில் தீவிரவாதத்தாக்குதல்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டாலும், இவ்வருடத்தில் நடத்தப்பட்ட மிகவும் கொடூரமான தாக்குதல்களில் இதும் ஒன்று.

தாலிபன் தீவிரவாதக்குழுவிலிருந்து பிரிந்து செயல்படும் மற்றொரு குழுவைச்சேர்ந்த ஜமாதுல் அஹ்ரார் இந்தத் தாக்குதலுக்கு தமது அமைப்பே காரணம் என்று உரிமை கோரியுள்ளார்.

Related Posts