சிசிஎல் கிரிக்கெட்: விக்ராந்த் அதிரடி சாதனை : தெலுங்கு வாரியர்ஸ் வெற்றி

ஒவ்வொரு ஆண்டும் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிசிஎல் கிரிக்கெட் போட்டி இந்த வருடமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்றய ஆட்டத்தில் சென்னை ரைனோஸ் அணியும் தெலுங்கு வாரியர்ஸ் அணியும் கொச்சி மைதானத்தில் மோதியது. முதலில் டாஸ் வென்ற சென்னை ரைனோஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் அசோக் செல்வனும், விக்ராந்தும் களம் இறங்கினர். இதில்...

வலி வடக்கு மீள்குடியேற்றம் : இராணுவத்தையும் உள்ளடக்கிய குழு தகவல் சேகரிப்பில்

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள மக்களின் காணிகள் நலன்புரி முகாம்களில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அவர்களின் காணிகள் தொடர்பான விபரங்களை சேகரிக்க தனியான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார். இந்தக் குழு ஒரு வாரத்துக்குள் தரவுகளை சேகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்படும் இதன் பின்னர் அவரது பணிப்புக்கு அமைய...
Ad Widget

காணாமல் போனவர்களின் உறவுகள் விசேட கந்துரையாடல்

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றுவருகின்றது. காணாமல் போனவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த காணமல் போனவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து இக் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர் இக் கலந்துரையாடலில் காணாமல் போனவர்களின் உறவுகள் தமக்குள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் அரசியல் நெருக்கடிகள் மற்றும் யாழ்பாணத்தில் நடைபெற்ற பொங்கல் தின நிகழ்வில்...

துன்னாலையில் பிடிபட்ட மிகப்பெரிய பாம்பு!!!

வடமராட்சி பகுதி துன்னாலை வடக்கு பருத்திதுறை பொலிஸ் பிரிவில் மிகவும் பெரிய பாம்பு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் காணி உரிமையாளன் தனது காணியை துப்பரவு செய்யும் போது 5 மீட்டர் நீளமான பாம்பு அகப்பட்டுள்ளது. அதனை கொல்வதற்கு நீண்ட நேரம் போராடியும் பலன் கிடைக்கவில்லை கடைசியாக அவ்வழியே சென்ற ஒருவரை...

சக பணியாளரை கொலை செய்த இலங்கைப் பெண்

ஐக்கிய அரபு ராஜ்சியத்தில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய இலங்கைப் பெண் ஒருவர், மற்றமொரு பணியாளரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டு பணிப் பெண்ணையே அவர் கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புஜாராஹ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமிரேட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வாக்குவாதத்தை அடுத்து, இரண்டு பேருக்கும் இடையிலான மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது....

வெள்ளை வான் அச்சுறுத்தல் விடுத்தவர்கள் கைது

யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டப்பகுதியில் உள்ள யுவதியொருவரின் வீட்டுக்குச் சென்று வெள்ளை வானில் கடத்துவோம் என்று அச்சுறுத்தல் விடுத்த மூவரை, நேற்று புதன்கிழமை (27) காலை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கைதான மூவரும், 28, 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவித்த பொலிஸார், இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனக்...

கவுதம்-தனுஷ் இணையும் காதல் படம்

கவுதம் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு ‘அச்சம் என்பது மடமையடா’ படம் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தில் சிம்பு-மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதைத் தொடர்ந்து கவுதம் மேனன் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது....

முதன்முறையாக இணையும் கமல்-பிரபு-கார்த்திக்

கௌதம் கார்த்திக் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படம் ‘முத்துராமலிங்கம்’. இப்படத்தை ராஜதுரை என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவிருக்கிறார். பஞ்சு அருணாச்சலம் பாடல்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜாவும் - பஞ்சு அருணாச்சலமும் இப்படத்தின் மூலம் இணைகிறார்கள். இப்படத்தில் நாயகிகளாக கேத்ரீன் தெரசா, ப்ரியா ஆனந்த் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும்,...

டி20 கிரிக்கெட் : அடிலெய்டில் ஒரு அடாவடி

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியின்போது டிவி சேனல் ஒன்றுடன் பேசிக்கொண்டே பேட்டிங் செய்ததுதான், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அவுட் ஆனதற்கு காரணம் என்று சர்ச்சை எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி செவ்வாய்க்கிழமை அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்தியா கோஹ்லியின் 90 ரன்கள் உதவியோடு, 188...

15 ஆண்டுகளுக்குப் பின் அஜீத்துடன் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி?

தன்னுடைய அடுத்த படத்தில் இயக்குநர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினுடன் அஜீத் இணைகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வேதாளம் படத்திற்குப் பின்னர் அஜீத் 2 மாதங்கள் ஓய்வெடுக்க திட்டமிட்டு லண்டன் செல்கிறார். அவர் திரும்பி வந்தவுடன் அடுத்து நடிக்கும் புதிய படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் அஜித்தை...

ஸீகா (zika) வைரஸை ஒழிக்க விரைந்து செயற்படுக! ஒபாமா வேண்டுகோள்!

பிரேஸிலை மோசமாகத் தாக்கிக்கொண்டிருக்கும் ஸீகா (zika) வைரஸானது (கொசுவினால் (நுளம்பு) பரவி, பிறக்கும் குழந்தைகளில் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடியது) தற்போது அமெரிக்காவையும் தாக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தடுக்கும் முகமாக இதனை அழிப்பதற்குரிய மருந்தைக் கண்டுபிடிப்பதற்கு விரைந்து செயற்படுமாறு வைத்தியர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். வெப்பமான காலப்பகுதியில் இந்நோய் அமெரிக்கா முழுவதும் பரவும் ஆபத்து அதிகமாக...

இரண்டு அறிக்கைகளும் தமிழ் சமூகத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளதுடன் பழைய காயங்களை மீண்டும் கிளறியுள்ளன- சனல் 4 (காணொளி இணைப்பு)

இலங்கையின் கொலைகளங்களிற்கு நாங்கள் திரும்பிச் சென்ற அதே காலப்பகுதியில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன என சனல்4 ஊடகம் தெரிவித்துள்ளது. முதலாவது இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு எதுவும் காணப்படாது என ஜனாதிபதி அறிவித்திருந்தார். யுத்தத்திற்கு பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட பல வீடியோக்கள் மூலம் யுத்தகுற்றங்கள் இடம்பெற்றது உறுதிசெய்யப்பட்டிருந்தது. இரண்டாவது காணமற்போனவர்கள்...

40ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்பது வெறும் மாயை – மக்ஷ்வல் பரணகம

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் வெறும் மாயையாகும் என்று காணாமல் போனோர் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது காணாமல் போனோர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் எப்போது நடைபெறும்...

மீள்குடியேற்றத்தினை அரசாங்கம் இழுத்தடிப்பு செய்கின்றது – வலி. வடக்கு மக்கள்

புதிய தரவுகள் சேகரிப்பு என்பது தமது மீள்குடியேற்றத்தை இழுத்தடிப்பு செய்வதற்கான நடவடிக்கை என வலி.வடக்கு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வலி.வடக்கின் மீள்குடியேற்றம் புதிய தரவுகள் சேகரிக்கும் ஆரம்ப கட்டத்துடன் நிற்பது தமக்கு மிகுந்த ஏமாற்றத்தினை தந்துள்ளதாக அந்தமக்கள் தெரிவிக்கின்றனர். வலி. வடக்கில் மக்களை மீளக்குடியேற்றும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட...

வடமாகாண முதலமைச்சர் நிதியத்தினால் வீடு கையளிப்பு

புத்தூர் பிரதேசத்தில் பெண் தலைமையிலான குடும்பம் ஒன்றுக்கு வடமாகாண முதலமைச்சர் நிதியத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு நேற்று புதன்கிழமை கையளிக்கப்பட்டது. முதலமைச்சர் நிதியத்தினால் செய்துகொடுக்கப்படும் இரண்டாவது இல்லம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் 6 இலடசம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புத்தூர் பிரதேசத்திற்கு நேற்று மாலை 5 மணியளவில் விஜயம்...

சுன்னாகம் நீர் பிரச்சினை : அனைத்து கட்சிகளிடம் ஹக்கீம் கோரிக்கை

சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சினை தொடர்பில் வெகுவிரைவில் தீர்வினை முன்வைப்பதற்கு நீர் வழங்கல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில் இதற்கான ஒத்துழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார். கடந்தக்காலங்களில் இந்த பிரச்சினையினை ஒரு சிலர் அரசியல் சுயநலனின் அடிபடையில் கையாண்டமையே அப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள்...

பெப்ரவரி 4ஆம் திகதி விடுவிக்காவிடின் போராட்டம் தொடரும்! – தமிழ் அரசியல் கைதிகள் அறிவிப்பு

"எதிர்வரும் பெப்ரவர் மாதம் 4ஆம் திகதி - இலங்கையின் சுதந்திர தினத்தன்று எம்மை விடுவிக்காவிடின் சிறைச்சாலைகளில் எமது விடுதலைக்கான போராட்டம் தொடரும்." - இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர். கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே தமிழ் அரசியல் கைதிகள் மேற்கண்டவாறு...

வடமாகாணத்தின் கல்வி நிலை மகிழ்ச்சியளிக்கிறது – ஜனாதிபதி

2015ஆம் ஆண்டு க.பொத உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 9 மாகாணங்களில் வட மாகாணம் முதலிடம் பெற்றுள்ளது. 25 மாவட்டங்களில் யாழ் மாவட்டமே முதலிடம் பெற்றுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (27) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டில் நடைபெற்ற சமுர்தி 'சிப்தொர' புலமை பரிசில் வழங்கல் நிகழ்வில்...

யாழில் ஏற்பட்ட திடீர் நில வெடிப்பு தொடர்பில் ஆய்வு! மக்கள் வெளியேற்றம்!!

யாழ். புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிலத்தில் உண்டான திடீர் விரிசல் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் உள்ள தேசிய கட்டங்கள் ஆராய்ச்சி அமைப்பினர் நேற்றய தினம் அப்பகுதியில் இவ் ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்...

யாழில் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல்

யாழ் உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக மீள்குடியேற்றப்பட வேண்டிய இடங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், நேற்று யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேனா ஹெட்டியாராச்சி தலைமையில் நடைபெற்றது. யாழ் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக மீள்குடியேற்றப்பட வேண்டிய இடங்கள்...
Loading posts...

All posts loaded

No more posts