- Tuesday
- May 19th, 2026
வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இந்த நியமனத்தை தாம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். குரே, முற்போக்கானவர் என்ற அடிப்படையில் அவரின் நியமனம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனும் இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்...
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் கருத்துக்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியலமைப்புத் தொடர்பில் பொதுமக்களின் கருத்தக்களைச் சேகரித்து வரும் குழு, தெரிவித்தது. அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில், இதுவரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோசனைகள் தங்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்த அக்குழு, இந்த கருத்துக்களைச் சேகரிக்கும் பணிகள், மார்ச் மாதம். முழுவதும் முன்னெடுக்கப்படும்...
அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் கருத்தறியும் செயற்பாட்டின் யாழ் மாவட்டத்திற்கான அமர்வு இன்று (15) யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமானது. அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் கேட்டறிய 20 உறுப்பினர்களை கொண்ட குழுவொன்று உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியாக இடம்பெற்று வரும் இக்குழுவின் கருத்தறியும்...
யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் மூன்று சந்தேகநபர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களுக்கு எதிராகவே யாழ். நீதவான் சின்னதுறை சதீஸ்தரன் இன்று இந்தப் பிடியாணை உத்தரவை வழங்கியுள்ளார். யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை யாழ் நீதவான்...
காதலர் தினம் நேற்று வந்தாலும் வந்தது பலரும் தங்களது படங்களின் ஆல்பம், தனி இசை ஆல்பம் என அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்துவிட்டனர். எது ஒரு படத்தில் இடம் பெற்றுள்ள பாடல், எது தனியாக வெளியிடப்பட்டுள்ள ஆல்பம் என பிரித்துப் பார்க்க முடியாதவாறு எதற்கும் வித்தியாசம் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்து ரசிகர்களைக்...
இலங்கையில் காதலர் தினத்தை ஒட்டிய காலத்தில் இளம் பெண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் உடற்கல்வி பயிற்சியாளரான டாக்டர் அசங்க விஜேரத்ன தெரிவித்துள்ளார். காதலர் தினத்துக்கு பின்னரான காலப் பகுதியில் பதிவாகும் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகம் என்று ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக டாக்டர் அசங்க விஜேரத்ன மேலும் கூறுகிறார். இலங்கையில் வழமையில், நாளொன்றுக்கு...
ரஜினி தற்போது ‘கபாலி’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரஜினி கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு சென்று அங்கேயே தங்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில், மலேசியாவில் ஜலன் துன் தன் சீவ் சின் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஷோரூம்...
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி சார்பில், 15-வது தென் இந்திய அளவிலான கலை விழா, ‘லாரிக்காஸ்-2016‘ என்ற தலைப்பில், கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழாவிற்கு இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சரஸ்வதி கண்ணையன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் பிரியா சதீஷ்பிரபு, அறங்காவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை கவிஞர் கவிதாசன், கவிஞர்...
அண்டார்டிகாவில் காமன்வெல்த் வளைகுடா பகுதியில் மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று ஒதுங்கியதால் சுமார் 1.5 லட்சம் பென்குயின்கள் கொல்லப்பட்டுவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகிவுள்ளது. அண்டார்டிகாவில் காமன்வெல்த் வளைகுடா பகுதி 100 ஆண்டுகளுக்கு மேலாக பென்குயின்களின் வசிப்பிடமாக இருந்து வருகிறது. மூன்று பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட காமன்வெல்த் வளைகுடாவின் கரையோரத்தில் வசிக்கும் பென்குயின்கள் கடலில் இருக்கும்...
வெற்றிமாறன் இயக்கி சமீபத்தில் வெளியான படம் 'விசாரணை'. தனுஷ் தயாரித்திருந்தார், லைக்கா நிறுவனம் வெளியிட்டிருந்தது. அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, சமுத்திரகனி, ஆடுகளம் முருகதாஸ் நடித்திருந்தார்கள், ஆந்திரா மாநிலம் குண்டூர் காவல் நிலையத்தில் சந்திரகுமார் என்ற ஆட்டோ டிரைவர் அனுபவித்த சித்ரவதைகளை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. அப்பாவி மக்கள் முதல் மிகப்பெரிய வி.ஐ.பி வரை...
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிவழங்கப்படவுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். வடமத்திய, மத்திய மற்றும் ஊவாக மாகாணங்களுக்கான மாநகர அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.
இலங்கையில் 21 வயதிற்குட்பட்ட 9400 யுவதிகள் காதலர் தினத்தில் கன்னித் தன்மையை இழக்கின்றனர். அத்துடன் அத்தினத்தில் 4500 ரூபாவுக்குட்பட்ட அறைகளில் 80 சதவீதம் காதல் ஜோடிகளுக்காக முன்பதிவு செய்துகொள்ளப்படுவதாகவும் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. ‘ஸ்கொட்டிஷோர்பிட்’ நிறுவனம் காதலர் தினப்பரிசுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், கருக்கலைப்பு நிலையம் மற்றும் வைத்திய நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்திய...
திருகோணமலையை தனிச்சிங்கள மாவட்டமாக மாற்ற அரசாங்கம் 30 ஆண்டு திட்டம் ஒன்றை 2011 ஆம் ஆண்டில் திட்டமிட்டு அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்று செயற்படுத்தி வருகின்றது. இத்திட்டத்திற்கு வடமத்திய மாகாண அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, மாத்தளை உட்பட பல மாவட்டங்கள் உள் வாங்கப்பட்டுள்ளன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்...
எந்த வகை இரத்தமானாலும் மிதிபடுவது சேர்ந்தே நித்தம்' எனக் குறிப்பிடப்பட்டு சுவரொட்டியொன்று யாழில் ஒட்டப்பட்டுள்ளது. சுவரொட்டியை ஒட்டியவர்கள் யார் என்ற விபரம் அதில் குறிப்பிடப்படவில்லை.
வடமாகாண சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட 35ஆவது மாணவர் அணி ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் 'ஆரோக்கியத்துக்கான நடைப்பயணம்' எனும் தொனிப்பொருளிலான ஊர்வலம், யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை (15) நடைபெற்றது. தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட இந்த ஊர்வலம், வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் வரை...
இறுதிப்போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கு, குழந்தைகளுக்கான பால்மாவினைக் கூட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததன் காரணமாக, குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனரென யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யுத்தத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிகிச்சையளித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், யுத்த காலத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்து பின்னர்...
"ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை நான் தாரைவார்க்கவில்லை. நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை பறித்தெடுத்தனர்'' என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நீர்கொழும்பு, கொச்சிக்கடையில் நேற்று நடைபெற்றது. பஸில் ராஜபக்ஷ,...
பாடசாலைக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக் கொடுத்து ஒரு கற்ற பரம்பரையை நாட்டுக்கு வழங்கி சர்வதேசத்தை வெற்றி கொள்வதற்கு ஏற்றவகையில் பிள்ளைகளைத் தயார்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்து பாடசாலை முறைமையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். மின்னேரிய...
அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் கருத்தறியும் அமர்வு இன்று (15) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது. புதிய அரசாங்கம் தற்போது புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒன்றினை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அது குறித்து மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் குழு நியமிக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக யாழ் மாவட்டத்திற்கான...
வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஷ்வரனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடையிலான சந்திப்பொன்று இன்று (15) மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள இச்சந்திப்பில் முதலமைச்சருடன் வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன், மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்படவுள்ளமை...
Loading posts...
All posts loaded
No more posts
