Ad Widget

வட மாகாண புதிய ஆளுநரின் நியமனத்தைக் கூட்டமைப்பு வரவேற்கின்றது

வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இந்த நியமனத்தை தாம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

குரே, முற்போக்கானவர் என்ற அடிப்படையில் அவரின் நியமனம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனும் இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் வட மாகாண எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராசாவும் குரேயின் நியமனத்தை வரவேற்றுள்ளார்.

Related Posts